ஜலப்பிரளயத்துக்குப் பின் மனித ஆளுகையின் காலம் ஆரம்பமாயிற்று – ஆதி 9:1-7 மனிதன் தன் சொந்த சட்டதிட்டங்களுக்குக் கீழ்படிவானோவென்று தேவன் சோதித்தார். அதிலும் மனிதன் தொல்வியடைந்தான். பல தோல்விகளுக்குப் பின் பாபேல் கோபுரத்தையும் கட்டி தேவனுக்கு கோபம் உண்டாக்கினான். எனவே தேவன் ஜனங்களின் பாஷையை தாறுமாறாக்கி, அவர்களை உலகமெங்கும் சிதறடித்தார் – ஆதி 11:7-9 அதிலும் தேவன் தனது மீட்பின் திட்டப்படி ஆபிரகாமை அழைத்து வேறுபடுத்தி கானானுக்குக் கொண்டு சென்றார்.