Menu Close

கர்த்தர் தன்னை நம்புகிறவர்களுக்கு அளிக்கும் பலன்

  • சங்கீதம் 5:11 “கர்த்தரை நம்புகிறவர்கள் யாவரும் சந்தோஷித்து, எந்நாளும் கெம்பீரிப்பார்களாக; நீர் அவர்களைக் காப்பாற்றுவீர்;”
  • சங்கீதம் 17:7 “கர்த்தரை நம்புகிறவர்களை அவர்களுக்கு விரோதமாய் எழும்புகிறவர்களினின்று உமது வலதுகரத்தினால் தப்புவித்து இரட்சிக்கிறவரே!”
  • சங்கீதம் 31:19 “கர்த்தருக்குப் பயந்தவர்களுக்கும், மனுபுத்திரருக்கு முன்பாக உம்மை நம்புகிறவர்களுக்கும், நீர் உண்டுபண்ணிவைத்திருக்கிற உம்முடைய நன்மை எவ்வளவு பெரிதாயிருக்கிறது!”
  • சங்கீதம் 37:40 “அவர்கள் கர்த்தரை நம்பியிருக்கிறபடியால், அவர்களைத் துன்மார்க்கருடைய கைக்குத் தப்புவித்து இரட்சிப்பார்.”
  • ஏசாயா 26:3 “உம்மை உறுதியாய்ப் பற்றிக்கொண்ட மனதையுடையவன் உம்மையே நம்பியிருக்கிறபடியால், நீர் அவனைப் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வீர்.”
  • நீதிமொழிகள் 29:25 “கர்த்தரை நம்புகிறவனோ உயர்ந்த அடைக்கலத்தில் வைக்கப்படுவான்.”
  • நீதிமொழிகள் 28:25 “கர்த்தரை நம்புகிறவனோ செழிப்பான்.”
  • 2 இராஜாக்கள் 18:5 “எசேக்கியாராஜா கர்த்தர் மேல் வைத்த நம்பிக்கையிலே, அவனுக்குப் பின்னும், அவனுக்கு முன்னும் இருந்த ராஜாக்களெல்லாரிலும் அவனைப்போல் ஒருவனும் இருந்ததில்லை”
  • சங்கீதம் 125:1 “கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப் போல் இருப்பார்கள்.”
  • 2 சாமுவேல் 22:31 “கர்த்தரை நம்புகிற அனைவருக்கும் கர்த்தர் கேடகமாயிருக்கிறார்.”
  • சங்கீதம் 32:10 “கர்த்தரை நம்பியிருக்கிறவனையோ கிருபை சூழ்ந்து கொள்ளும்.”
  • சங்கீதம் 22:4 “கர்த்தரை நம்பினவர்களை கர்த்தர் விடுவித்தார்.”
  • சகரியா 9:12 “நம்பிக்கையுடைய சிறைகளே, அரணுக்குத் திரும்புங்கள்; இரட்டிப்பான நன்மையைத் தருவேன், இன்றைக்கே தருவேன்.”
  • சங்கீதம்34:22 “கர்த்தரை நம்புகிற ஒருவன் மேலும் குற்றஞ்சுமராது.”

Related Posts