Menu Close

இயேசுவின் மூன்றாம், நான்காம் விசாரணை

விடியற்காலமானபோது ஜனத்தின் மூப்பரும், பிரதான ஆசாரியரும், வேதபாரகரும் கூடிவந்து ஆலோசனைசங்கத்தில் இயேசுவைக் கொண்டுவந்து நிறுத்தி “நீ கிறிஸ்துவா” என்று கேட்டனர்.அதற்கு அவர் “நான் உங்களுக்குச் சொன்னாலும் நம்பமாட்டீர்கள்” என்றார். “நீ தேவனுடைய குமாரனா?” என்றனர். அதற்கு அவர்: “நீங்கள் சொல்லுகிறபடியே நான் அவர் தான் என்றார்.” உடனே அவர்கள் வேறு சாட்சி வேண்டுவதில்லை என்று பிலாத்துவினிடத்தில் கொண்டு போனார்கள் – லூக்கா 22 : 66 – 71

பிலாத்து இயேசுவை நோக்கி “நீ  யூதருடைய ராஜாவா?” என்று கேட்டான். அதற்கு இயேசு: “நீ சொல்லுகிறபடிதான்”  என்றார். பிரதான ஆசாரியர்கள் அவர்மேல் அநேகங் குற்றங்களை சாட்டினார்கள். இயேசுவோ மாறுந்தரம் ஒன்றும் சொல்லவில்லை. அப்பொழுது பிலாத்து “இந்த மனுஷனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை” என்றார்.

Related Posts