ஒரு பரிச்சேயனும், ஆயக்காரனும் ஜெபம் பண்ணும்படி தேவாலயத்துக்குப் போனார்கள். பரிச்சேயன் பரிகாரனாக இல்லாமல், அநியாயக்காரனாக இல்லாமல், விபச்சாரக்காரனாக இல்லாமல், வாரத்தில் இரண்டு தடவை உபவாசித்து தசமபாகம் சரியாக செலுத்துகிறவனாக இருந்தான். இப்பண்புகள் அனைத்தும் நல்ல பண்புகள். ஆனால் இவற்றால் ஒரு மனிதன் நீதிமானாக்கப் படுவதில்லை. நான் இவ்வாறெல்லாம் இருக்கிறேன் என்று சொல்வது சுய நீதியாகும். நம்முடைய நீதி அழுக்கான கந்தையைப் போல் உள்ளதாக ஏசா 64 : 6 ல் கூறப் பட்டுள்ளது. மனிதன் இயேசுவை விசுவாசிப்பதினால் அடையும் தேவநீதியினால் மட்டுமே நீதிமானாக்கப்படுகிறான். (ரோ 3 : 20, 22 – 24) பரிச்சேயனுக்கு தேவனுடைய உதவியும், இரக்கமும், கிருபையும், எப்போதும் தேவை என்பது தெரியவில்லை. ஆயக்காரன் தன்னுடைய ஜெபத்தில் தான் ஒரு பாவி என்று ஒப்புக்கொண்டதோடு, தாழ்மையுடன், மனந்திரும்புதலோடு, தேவனுடைய மன்னிப்பையும், கிருபையையும், இரக்கத்தையும் பெற்றுக்கொள்ள கெஞ்சினான். எனவே பரிச்சேயன் அல்ல ஆயக்காரனே நீதிமானாக்கப்பட்டான்.
நாமும் நமது பாவங்களைக் கர்த்தரிடம் கூறி அவற்றை மன்னிக்குமாறு கேட்பதோடு நம்மீது கிருபையாக இருந்து நம்மைப் பொறுப்பேற்று வழிநடத்துமாறு முழுவதும் சரணடைய வேண்டும். மேலும் கிறிஸ்து இயேசுவிலிலுள்ள இலவசமான மீட்பை விசுவாசத்துடன் பெற்றுக் கொள்ள வேண்டும் – ரோ 3 : 24