Menu Close

இயேசு கூறிய நல்ல நண்பன் பற்றி – லூக்கா 11:5–8

ஒருவன் தன் சிநேகிதனிடத்தில் பாதிராத்திரியில் போய் அவன் வீட்டிற்கு அவனுடைய சிநேகிதன் வந்திருப்பதாகவும், அவனுக்குக் கொடுப்பதற்கு தன்னிடத்தில் ஒன்றுமில்லாததால் மூன்று அப்பங்கள் கடனாகக் கேட்டான். ஆனால் அந்த சிநேகிதன் “என்னை ஏன் இந்த ராத்திரியில் கதவும் பூட்டிய பின்னும் தொந்தரவு செய்கிறாய், என்னுடைய பிள்ளைகள்
இங்கு தூங்கிக் கொண்டிருக்கிறார்கள், அதனால் என்னால் தரமுடியாது என்றான்.

பின்பு அவன் மனந்திரும்பி அவனுக்கு சிநேகிதனாயிருந்தபடியினாலும், அவன் வருந்திக் கேட்டுக் கொண்டபடியினாலும் எழுந்திருந்து அவன் கேட்டதைக் கொடுப்பான் என்று இயேசு கூறினார். இதேபோல் உள்ளத்தில் உணர்ந்து, விடாமல் ஊக்கமாக ஜெபித்தால் நமக்குத் தேவன் நிச்சயமாக நாம் கேட்டதைத் தருவார்.

இதிலிருந்து நாம் கற்றுக் கொண்ட பாடம் நமது ஜெபம் தேவனுடைய திட்டத்தை மாற்றாது. நம்மை சரிபடுத்தி ஆயத்தப்படுத்துகின்றது.

Related Posts