Menu Close

யோசேப்பு எகிப்துக்கும் பின் நாசரேத்துக்கும்

தேவனாகிய கர்த்தர் யோசேப்புக்குத் தரிசனமாகி, ஏரோது பிள்ளையைக் கொலை செய்யத்தேடுவதால் எகிப்துக்குப் போகக் கூறினார். யோசேப்பு கர்த்தருடைய வார்த்தையின்படியே பிள்ளையையும் அதன் தாயையும் அழைத்துக் கொண்டு எகிப்துக்குச் சென்றார். கர்த்தருடைய வார்த்தை வரும்வரை அங்கிருந்தனர் – மத் 2:13-15

ஏரோது மரித்ததும் தூதன் யோசேப்புக்குத் தோன்றி, பிள்ளையின் பிராணனை வாங்கத் தேடினவன் மரித்து விட்டதால் இஸ்ரவேலுக்குப் போகச் சொன்னார். அங்கு ஏரோதின் மகன் ஆட்சி செய்ததால் யோசேப்பு அங்கு செல்ல பயந்தார். கர்த்தர் யோசேப்புக்கு எச்சரித்தபடி அவர்கள் கலிலேயாவுக்கு வந்தனர் – மத் 2:19-23   இந்த சம்பவம் ஓசியா தீர்க்கதரிசி தீர்க்கதரிசனமாகக் கூறியதாகும் – ஓசி 11 :1 யோசேப்பு எகிப்தை விட்டு கலிலேயாவுக்கு வந்து அங்குள்ள நாசரேத் என்னும் ஊரில் மரியாளுடனும், குழந்தையுடனும் வசித்து வந்தார்.

Related Posts