Menu Close

இயேசுவின் ஊழிய ஆரம்பம்

இதற்குப் பின் இயேசு தமது வீட்டைத் துறந்து வெளியே வந்து யூதேயா, கலிலேயா மற்றும் சமாரியாவின் ஒவ்வொரு பட்டணத்திலும், கிராமத்திலும், பட்டணத்திலும் ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தை அறிவித்தும், சத்தியத்தைப் போதித்தும், நற்செய்தியை அறிவித்தும் வந்தார் – மத் 4:13

கலிலேயாவில் இருளில் இருக்கிற ஜனங்கள் பெரிய வெளிச்சத்தைக் கண்டார்கள். மரண இருளின் திசையிலிருக்கிறவர்களுக்கு வெளிச்சம் உதித்தது – மத் 4:15
அதுமுதல் மத் 4:17 “மனந்திரும்புங்கள் பரலோகராஜ்ஜியம் சமீபத்திருக்கிறது.” என்று இயேசு பிரசங்கித்தார்.

இயேசு கலிலேயா கடலோரம் நடந்து போகையில் மீன்பிடிக்கிறவர்களாயிருந்த பேதுரு, அந்திரேயா, யாக்கோபு, யோவான் ஆகியவர்களை அழைத்தார். உடனே அவர்கள் தங்கள் தொழிலை விட்டு இயேசுவுக்குப் பின் சென்றனர் – மத் 4:18-22
ஆயத்துறையில் லேவியை அழைத்து தன் சீஷராக்கினார் – மாற் 2:14
நாசரேத் ஊரிலிலுள்ள ஜெபஆலயத்தில் வேதவசனத்தை வாசிக்கும் பொறுப்பு அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவர் ஏசாயா தீர்க்கதரியின் புத்தகத்திலிலுள்ள வசனத்தை வாசித்தார் – லூக் 4:16-21

Related Posts