இயேசு இரண்டு எஜமான்களுக்கு ஊழியம் செய்யாதிருங்கள் என்று கூறவில்லை. அப்படி செய்ய உங்களால் கூடாது என்கிறார். ஏனெனில் ஒருவனைப் பகைத்து, மற்றவனை சிநேகிக்க வேண்டி வரும் என்பதாலும், இல்லையெனில் ஒருவனைப் பற்றிக் கொண்டு மற்றவனை அசட்டை பண்ண வேண்டி வரும் என்பதாலும் இவ்வாறு கூறுகிறார்.
உலகில் நமக்குப் பொருள் தேவை என்பது உண்மை தான். ஆனால்
பொருளீட்டுவதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வாழ்கிறவர்கள் தேவனுக்கு ஊழியம் செய்ய இயலாது. உலகத்துக்குரிய காரியங்களில் அதாவது ஆடம்பர வாழ்க்கைக்குச் செல்வோமென்றால் தேவனைப் பற்றி சிந்திக்கக் கூட நேரமிருக்காது. தேவனுக்கென்றும், அவருடைய அரசுக்கென்றும் வாழ்கிறோமா? அல்லது இறுதிக் காலத்தில் நம்மை விட்டுப் பிரிந்து போகும் உலகப் பொருட்களுக்காக வாழ்கிறோமா? நமது பொருட்களா அல்லது தேவனைக் குறித்த காரியங்களா எவையென்று நாம் முடிவெடுக்க வேண்டும்.