Menu Close

இயேசு நானே வாசல் என்று கூறியதன் விளக்கம் – யோவான் 10 : 7, 9

இயேசுவே ஆடுகளுக்கு வாசல். அவர் வழியாகப் பிரவேசிக்கிறவர்கள் இரட்சிக்கப்படுவார்கள். அதாவது பரிபூரண நித்தியஜீவனைப் பெற்று பாவம், குற்றவுணர்ச்சி, ஆக்கினை எல்லாவற் றிலுமிருந்து விடுவிக்கப் படுவார்கள். இயேசு ஜீவனுக்குச் செல்லும் வாசலாயிருக்கிறார். நாட்டுக்கு நாடு, மக்களுக்கு மக்கள், இனம், மொழி கலாச்சாரங்களில் வேறுபட்டு இருக்கும் இந்த உலகில் ஜீவனுக்குள் போகும் வாசலை ஒவ்வொருவரும் தேடிக்கொண்டேயிருக்கின்றனர். பலர் தவறான வழியில் சென்று தவறான வாசலில் நுழைகின்றனர். தவறான வாசல் என்றுமே சரியான இடத்திற்கு அழைத்துச் செல்லுவதில்லை. இயேசு ஒருவரே தெய்வீக வாசலாய் வெளிப்பட்டதால் அந்த வாசலுக்குள் பிரவேசிக்கிறவர்கள் பரலோக தூதர்களால் நித்திய வாழ்விற்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். வேறு எந்த வாசலிலும் நித்திய வாழ்விற்கு இப்படிப்பட்ட வரவேற்பு கொடுக்கப்படுவதில்லை.

Related Posts