Menu Close

இயேசு தேவாலயத்தைச் சுத்தப்படுத்தியது

இயேசுவின் ஊழியத்தில் பொது இடத்தில் நடந்த முதல் நிகழ்ச்சி தேவாலயத்தைச் சுத்தப்படுத்தியதாகும் – லூக் 19: 45,46, யோ 2:13-22 மத் 21:12-17, மாற் 11:15-17 அதுபோலவே அவரது ஊழியத்தின் கடைசி பொது நிகழ்ச்சியும் ஆலயத்தை சுத்தப்படுத்தியதாகும். இயேசு உக்கிர கோபமடைந்தது, தேவனுடைய பரிசுத்த ஆலயத்திலிருந்து தேவனற்ற மக்களை, பேராசை பிடித்தவர்களை, தேவாலயத்தின் ஆவிக்குரிய நோக்கத்தை அழித்துக் கொண்டிருந்தவர்களை வெளியே துரத்தினார். இயேசு தேவாலயத்தைச் சுத்திகரித்ததினால் கற்றுக்கொண்ட ஆவிக்குரிய பாடம்

  1. தேவாலயத்திற்குள் பரிசுத்தமும், உண்மையான தேவபக்தியும் இருக்க வேண்டும் என்பது இயேசுவின் கரிசனை – யோ 17:17,19
  2. தேவாலயத்தில் ஆவியோடும், உண்மையோடும் ஆராதிக்க வேண்டும்.
  3. தேவாலயத்தை தன் சொந்த லாபத்திற்கும், மகிமைக்கும், சுய முன்னேற்றத்திற்கும் பயன்படுத்துகிறவர்களை இயேசு கண்டனம் செய்கிறார்.
  4. எல்லா உண்மை கிறிஸ்துவ ஊழியங்களுக்கும் தேவையானது தேவனுடைய இராஜ்ஜியத்தை அசுத்தப்படுத்துகிற இழிவுபடுத்துகிறவர்களுக்கு விரோதமாக எதிர்த்து நிற்பதாகும் – 1கொரி 6:9-11
  5. வஞ்சகம், ஓழுக்கக்கேடு, தனிப்பிரிவுகளை அமைத்தல், பரிசுத்த குலைச்சலாக்குதல், ஆகியவற்றை அழித்துத் தூய்மைப்படுத்த இயேசுவை தமது அமைப்புக்குள் வரவிட வேண்டும் – வெளி 2,3 அதி.

Related Posts