இயேசு ஓய்வுநாளில் கப்பர்நாகூமிலிலுள்ள ஜெபஆலயத்தில் போதித்த பொழுது அவருடைய போதகத்தைக் குறித்து ஜனங்கள் ஆச்சரியப்பட்டனர். அங்கிருந்த அசுத்த ஆவியுள்ள மனுஷன் இயேசுவைத் “தேவனுடைய பரிசுத்தர்” என்று யாவருக்கும் முன்பாக, தான் பிடித்திருந்தத மனிதனின் மூலம் கூறியது. அதற்கு இயேசு அதிகாரத்துடன் போகும்படி கட்டளையிட்டார். உடனே அந்த அசுத்த ஆவி அந்த மனிதனை அலைக்கழித்து, மிகுந்த சத்தமிட்டு, அவனை விட்டுப் போனது. அதுமுதல் இயேசுவின் கீர்த்தி கலிலேயா நாடெங்கும் பிரசித்தமாயிற்று
இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ளும் பாடம் என்னவெனில்: எப்படிப்பட்ட சூனியங்களானாலும், அசுத்த ஆவிகளானாலும் அவ்வாறு தாக்கினவர்களை இயேசுவண்டை அழைத்து வரும்போது அவைகள் அவர்களை விட்டு ஓடிப்போகும்.