Menu Close

Category: இயேசு யார்

இயேசு கிறிஸ்து ஒரு மதத்தலைவர் அல்ல. ஒரு மதத்தை அவர் உருவாக்கவுமில்லை. இயேசுகிறிஸ்து மனிதனாக வந்த தேவன். மதங்கள் கூறியதன் சாரம்சம். யூதமதம் காத்திருந்த மேசியா. உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்க வெளிப்பட்ட தேவ ஆட்டுக்குட்டி. (யோவான் 1: 29). அவருக்கு மத எல்லைகள் இல்லை. தேச எல்லைகள் இல்லை. எங்கும் விரிந்த வானம் போல, அனைவருக்கும் பொதுவான கதிரவனைப் போல, உலகின் ஒரே இரட்சகர் (அப்போஸ்தலர் 4 : 12). அவர் தந்தது மார்க்கம். உலக மக்கள் அனைவருக்குமான இரட்சிப்பின் மார்க்கம். அது தேவன் மனிதனாக வந்த மார்க்கம். தேவ ஆலோசனையில் போதித்த மார்க்கம். மனிதரை பரலோகம் சேர்க்கக் கரம் பிடிக்க வந்த மார்க்கம். அது பாவ உலகிற்காக உன்னதத்திலிருந்து தோன்றிய அருணோதயம் (லூக்கா 1: 78, 79). இயேசு என்றால் இரட்சகர் என்று பொருள் (மத்தேயு 1 : 21). தேவன் பரிசுத்த ஆவியினால் இயேசுவை அபிஷேகம் பண்ணினார் (மத்தேயு 3 : 16 ,17, யோவான் 3:34 ). அபிஷேகம் பண்ணப்பட்ட இயேசுவை நாம் இயேசுகிறிஸ்து என்றழைக்கி றோம். இயேசு அபிஷேகம் பண்ணப்பட்டவர் மட்டுமின்றி, தம்மை விசுவாசிக்கிறவர்களில் வாஞ்சையோடு கேட்கிறவர்களைப் பரிசுத்த ஆவியினால் அபிஷேகம் பண்ணுகிறவராகவும் இருக்கிறார் (மத்தேயு 3:11)

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

இயேசு அழிவில்லாதவரா? ஆவியை ஒப்புக்கொடுத்தவரா?

தேவன் அழிவில்லாதவர் என பவுல்: 1 தீமோத்தேயு 1 : 17 ல் “நித்தியமும் அழிவில்லாமையும் ஆதரிசனமுமுள்ள ராஜனுமாய் …” கூறுகிறார்.  ஆனால்…

இயேசு தேவனிடத்திலிருந்து வந்தவரா? அநாதியானவரா?

யோவான் 8 : 58 “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்.” (இயேசுவே கூறுகிறார்) யோவான் 1 : 18 “தேவனை ஒருவனும்…