ஆவி: லூக்கா 23 : 46 “இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்.”
ஆத்துமா: மத்தேயு 26 : 38 “அப்பொழுது, அவர்; என் ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கங்கொண்டிருக்கிறது;…”
சரீரம்: லூக்கா 23 : 52 “அவன் பிலாத்துவினிடத்தில் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,”
இயேசு சிலுவையில் தொங்கும் போது, தன்னுடைய ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று பிதாவிடம் கூறியதிலிருந்து, ஆவி உடையவர் என்றறிகிறோம். இயேசு கெத்செமெனே தோட்டத்தில் தன்னுடைய ஆத்துமா மரணத்துக்கேதுவான துக்கம் கொண்டிருக்கிறது என்று பேதுருவிடமும், செபேதேயுவின் குமாரரிடமும் தன்னுடைய வாயால் கூறியதிலிருந்து, ஆத்துமா உடையவர் என்றறிகிறோம். அரிமத்தியா ஊரிலிருந்து வந்த யோசேப்பு பிலாத்துவிடம் போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டான் என்று கூறியதிலிருந்து சரீரமுடையவர் என்றும் அறிகிறோம். எனவே இயேசு ஆவி ஆத்துமா சரீரம் உடையவர்.