Menu Close

இயேசு தேவனிடத்திலிருந்து வந்தவரா? அநாதியானவரா?

யோவான் 8 : 58 “ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன்.” (இயேசுவே கூறுகிறார்)

யோவான் 1 : 18 “தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.”

கொலோசெயர் 1 : 17 “அவர் எல்லாவற்றிற்கும் முந்தினவர், எல்லாம் அவருக்குள் நிலைநிற்கிறது.”

கொலோசெயர் 1 : 15 “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.”

வெளிப்படுத்தல் 3 : 14 “…உண்மையும் சத்தியமுமுள்ள சாட்சியும், தேவனுடைய சிருஷ்டிக்கு ஆதியுமாயிருக்கிற ஆமென் என்பவர்….”

நீதிமொழிகள் 8 : 22, 23 “கர்த்தர் தமது கிரியைகளுக்கு முன் பூர்வமுதல் என்னைத் தமது வழியின் ஆதியாகக் கொண்டிருந்தார்.”

“பூமி உண்டாகுமுன்னும், ஆதிமுதற்கொண்டும் அநாதியாய் நான் அபிஷேகம் பண்ணப்பட்டேன்.”

ஏசாயா 9 : 6 “நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்;….”

தேவன் அநாதியானவர். நமக்காக குமாரனாக தேவனிடத்திலிருந்து வந்தார். ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னே, பூமி உண்டாவதற்கு முன்னே இருந்தவர். அதரிசனமானவர். ஆதியும் அந்தமுமில்லாதவர்.

Related Posts