சூரியனின் ஒளி நிலவில் பிரகாசிப்பதுபோல உலகின் ஒளியாகிய இயேசுவின் ஒளி நம்மில் பிரதிபலிப்பதால் நாம் உலகிற்கு ஒளியாக இருக்கிறோம். நமது வாழ்க்கை மலைமேலிருக்கிற பட்டணத்தைப்போல நாம் கிறிஸ்துவுக்குள்ளிருந்து மற்றவர்களுக்கு வழிகாட்டுவதாக, முன்மாதிரியாக உலகமக்களுக்கு வெளிச்சத்தைக் காண்பிக்க வேண்டுமென்று தேவன் எதிர்பார்க்கிறார்.
விளக்குத்தண்டின் மேல் விளக்கை ஏற்றி வைத்தால் அது வீட்டிலிலுள்ள எல்லாருக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும். இதேபோல் புறஜாதிகள் நீங்கள் காட்டுகிற அன்பில், நற்கிரியைகளில் வெளிச்சத்தைக் காணவேண்டும். நற்செயல்கள் செய்வதற்குத் தவறும் போது, தவறுகளுக்கு ஒத்துப்போகும்போது, தவறுகளை எதிர்த்துப் பேசாதபோது, பாவத்தினால் கரைப்படும்போழுது, நற்செய்தி அறிவிக்கும் வாய்ப்பை தள்ளிவிடும்போது, உண்மைக்காகத் தைரியமாய் நிற்காதபோது விளக்கை மரக்காலில் மூடுகிறவர்களாக இருப்போம்.
மற்றவர்களுக்கு நன்மை செய்ய வேண்டும். ஆனால் நாம் செய்யும் நன்மைகள் யாவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக விளம்பரப்படுத்தலாகாது- மத் 6:1-4 நமது நற்கிரியைகளின் நோக்கம் பரலோகபிதாவை மகிமைப்படுத்துவதாக இருக்க வேண்டும்.