இயேசுவும் சீஷர்களும் படகில் பிரயாணம் பண்ணிக்கொண்டு சென்ற போது படகு அலைகளினால் மூடப்படத்தக்கதாய் கடலில் பெருங்காற்று உண்டாயிற்று. இயேசுவோ படகில் நித்திரையாயிருந்தார். சீஷர்கள் இயேசுவினிடம் வந்து “ஆண்டவரே எங்களை இரட்சியும் மடிந்து போகிறோம் என்றார்கள்” “படகைக் காப்பாற்றும், நம்மைக் காப்பாற்றும்” என்று கூறவில்லை. இயேசு மட்டும் எப்படியாவது தப்பித்துக் கொள்வார் என்று எண்ணினார்கள். இயேசு அவர்களைப் பார்த்து “அற்பவிசுவாசிகளே! ஏன் பயப்படுகிறீர்கள்” என்று சொல்லி எழுந்தது காற்றையும், கடலையும் அதட்டினார். உடனே மிகுந்த அமைதல் உண்டாயிற்று. இயேசு தங்களோடு படகில் இருப்பதால் அழிவு ஏற்படாது என்ற விசுவாசம் சீடர்களுக்கு இல்லாமல் போயிற்று. விசுவாசமின்மையால் அவர்கள் பயந்தனர். நமது ஆண்டவர் இயற்கையின் மீது அதிகாரமுள்ளவராக தமது வார்த்தையால் காற்றையும் கடலையும் அதட்டி அமர்ந்திருக்கச் செய்தார்.
இயேசு நமது வாழ்க்கையிலும், நம்மோடும் இருக்கும் போது நாம் அமிழ்ந்து போக மாட்டோம். நமக்கு வரும் எந்தப் போராட்டங்களையும் தேவன் அமர்த்தி விடுவார்.