முதலாவது கற்கள் அப்பங்களாகும்படி சொல்வது தமது தேவைக்காகவும், மாம்ச இச்சையை நிறைவேற்றுவதற்காகவும் அற்புதம் செய்யத் தூண்டுவதாகும் – 1யோ 2:16 இச்சோதனையில் இயேசு வேதவசனத்தால் வெற்றிகொண்டார்.
இரண்டாவதாக மேலிருந்து கீழேவிழக் கூறுகிறான். நாம் தவறுதலாக விழும் சமயங்களில் தேவன் பாதுகாப்பது உண்மைதான். ஆனால் வேண்டுமென்று உயரத்திலிருந்து குதித்தால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும். இதிலிருந்து தப்புவிக்க இயேசு வேதவசனத்தைத் தான் பயன்படுத்தினார்.
மூன்றாவதாக இயேசுவுக்கு உலகின் மீது அதிகாரம் கொடுப்பதாகக் கூறியது பொய். அதை சாத்தானால் அளிக்க முடியாது. இயேசுவுக்குக் அதைக் கொடுப்பதற்கு சாத்தானுக்கு அருகதையில்லை. மேலும் இயேசு தேவனைத் தவிர மற்றவர்களைத் தொழுதுகொள்வது தவறு என்பதையும் வேதவசனத்தின் மூலம் கூறினார்.
சாத்தான் தோற்கடிக்கப்பட்டதை அறிந்தவனாய், இயேசுவை விட்டுச் சென்றான். உடனே இயேசுவுக்கு தேவதூதர்கள் பணிவிடைசெய்தனர்.