பேதுருவின் பயத்தை நீக்கிய இயேசுவின் கரம்:
மாற்கு 6 : 45 – 48 “அவர் ஜனங்களை அனுப்பிவிடுகையில், தம்முடைய சீஷர்கள் படவில் ஏறி, அக்கரையில் பெத்சாயிதாவுக்கு எதிராக, தமக்கு முன்னே போகும்படி அவர்களைத் துரிதப்படுத்தினார். அவர் ஜனங்களை அனுப்பிவிட்டபின்பு, ஜெபம்பண்ணும்படி ஒரு மலையின்மேல் ஏறினார். சாயங்காலமானபோது படவு நடுக்கடலிலிருந்தது; அவரோ கரையிலே தனிமையாயிருந்தார். அப்பொழுது காற்று அவர்களுக்கு எதிராயிருந்த படியினால், அவர்கள் தண்டு வலிக்கிறதில் வருத்தப் படுகிறதை அவர் கண்டு, இராத்திரியில் நாலாம் ஜாமத்தில் கடலின்மேல் நடந்து, அவர்களிடத்தில் வந்து, அவர்களைக் கடந்து போகிறவர்போல் காணப்பட்டார்.
இயேசு 5 அப்பம் 2 மீனை ஆசீர்வதித்து 5000 பேரைப் போஷிக்கச் செய்து அனுப் பிய பின், தான் துரிதமாகச் செயல்பட்டு தம்முடைய சீஷர்களை தமக்கு முன்னே அக்கரையில் உள்ள பெத்சாயிதாவுக்கு எதிராகப் போகும்படி துரிதப்படுத்தினார். ஏனெனில் ஜனங்கள் இயேசுவை ராஜாவாக்க முயற்சித்ததால், அதை அறிந்த இயேசு மறுபடியும் அவர்களிடமிருந்து விலகி தனியாக மலையின்மேல் ஏறி ஜெபம் பண்ணச் சென்றார். சீஷர்கள் மட்டும் அந்த இருட்டு வேளையில் படகில் ஏறி கடலின் கரையிலுள்ள கப்பர்நகூமுக்கு இயேசு இல்லாமல் பயணமானார்கள். சாயங்கால வேளையில் கரையில் இயேசு தனிமையாக இருந்தார். சீஷர்கள் படகில் போய்க்கொண்டிருந்தபோது பெருங் காற்றினால் கடல் கொந்தளித்தது. காற்று படகுக்கு எதிராக வீசியது. சீஷர்களோ தாங்கள் சரியாகப் போவதாக நினைத்துக் கொண்டிருந்தனர். அவர்களின் உண்மையான நிலையை இயேசு கண்டார். மலையின்மேல் இருந்தாலும், சீஷர்களின் நிலைமையை அறிந்து, இரவின் நாலாம் ஜாமத்தில் கடலில் நீந்தி வராமல், நீரின் மேல் நடந்து அவர்களிடத்தில் வந்தார்.
சீஷர்களின் பயத்தை இயேசு போக்கினார்:
மாற்கு 6 : 49 – 51 “அவர் கடலின்மேல் நடக்கிறதை அவர்கள் கண்டு, ஆவேசம் என்று எண்ணி, சத்தமிட்டு அலறினார்கள். அவர்களெல்லாரும் அவரைக் கண்டு கலக்கமடைந்தார்கள். உடனே அவர் அவர்களோடே பேசி: திடன்கொள்ளுங்கள், நான்தான், பயப்படாதிருங்கள் என்று சொல்லி, அவர்கள் இருந்த படவில் ஏறினார். அப்பொழுது காற்று அமர்ந்தது; அதினால் அவர்கள் தங்களுக்குள்ளே மிகவும் பிரமித்து ஆச்சரியப்பட்டார்கள்.”
இருளின் மத்தியில் சீஷர்கள் பயந்த சூழ்நிலையில் இருந்ததால் இயேசு நடந்து வருகிறதைப் பார்த்து ஆவேசம் என்று சத்தமிட்டனர் (மாற்கு 6 : 48, 49). இதற்கு முன் அவர்கள் இதைப் போன்ற எந்த ஆவேசத்தையும் பார்த்ததில்லை. எனவே அலறினார்கள். கர்த்தர் தான் சமுத்திரம் புரண்டு வந்தபோது கதவுகளால் அடைத் தவர் (யோபு 38 :8), அவைகளிடம் அதன் எல்லையைக் குறித்து அதற்குத் தாழ்ப்பா ள்களையும், கதவுகளையும் போட்டு, இம்மட்டும் மிஞ்சி வராதே என்றவரும் அவரே (யோபு 38:10,11) இயற்கை மட்டுமல்ல, கடலும் கூட அவருக்குக் கட்டுப் படும் என்றறிகிறோம். சீஷர்களின் படகு அமிழ்ந்து விடுமே என்று ஓடி வந்த இயேசு, நமது வாழ்க்கையும் அமிழ்ந்து போக விட மாட்டார். சீஷர்கள் எல்லோ ரும் மிகவும் கலக்கம் அடைந்தனர். அதனால் இயேசு அவர்களோடே பேசி நான் தான் என்று அவர்களைத் திடன் கொள்ளச் செய்தார். பயப்படாதிருங்கள் என்று கூறினார். அவர்கள் இருந்த படகில் இயேசு ஏறினார். உடனே காற்று அமர்ந்தது அவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
பேதுருவின் பயத்தை இயேசு போக்கினார்:
மத்தேயு 14 : 28 – 32 “பேதுரு அவரை நோக்கி: ஆண்டவரே! நீரேயானால் நான் ஜலத்தின்மேல் நடந்து உம்மிடத்தில் வரக்கட்டளையிடும் என்றான். அதற்கு அவர்: வா என்றார். அப்பொழுது, பேதுரு படவை விட்டிறங்கி, இயேசுவினிடத்தில் போக கடலின்மேல் நடந்தான். காற்று பலமாயிருக்கிறதைக் கண்டு, பயந்து அமிழ்ந்துபோகையில்: ஆண்டவரே என்னை இரட்சியும் என்று கூப்பிட்டான். உடனே இயேசு கையை நீட்டி அவனைப்பிடித்து: அற்பவிசுவாசியே, ஏன் சந்தேகப்பட்டாய் என்றார். அவர்கள் படவில் ஏறினவுடனே காற்று அமர்ந்தது. “
படகில் உள்ள அத்தனை பேருக்கும் இல்லாத ஒரு ஆசையும், வாஞ்சையும் பேதுருவுக்கு வந்தது. அந்த வாஞ்சையினால் இயேசுவிடம் தானும் இயேசுவைப் போல் கடலில் மேலே நடக்க வேண்டும் என்று கேட்டான். இயேசு வா என்று கூறி னார். இயேசு எல்லோரையும் வா என்றுதான் அழைப்பார். பேதுரு படகை விட்டி றங்கி ஜலத்தின் மேல் நடந்தான். பேதுரு கடலின் மேல் நடக்கக் கேட்டவுடன் இயேசு கடிந்து கொள்ளவில்லை. இப்படிப்பட்ட விசுவாசத்துடன் பேதுரு இருந்த தால் தான், இயேசு அவரை மிகுதியான வல்லமையுடன் பயன்படுத்தினார். பெந்தேகோஸ்தே நாளன்று பேதுரு பிரசங்கித்த செய்தியின் மூலமாக 3000 பேர் மனந்திரும்பச் செய்தார். காற்று பலமாக வீசியதால் அதுவரை இயேசுவையே பார்த்துக் கொண்டிருந்தவர் காற்றைப் பார்த்தவுடன் அமிழ்ந்து போகிறான். பேதுரு திறமையான மீனவன். அவன் எந்த ஆழத்தில் சென்றாலும் நீந்தி வெளியே வர அவனுக்குத் தெரியும். நடந்து இயேசுவிடம் செல்ல வேண்டும் என்ற எண்ண த்தில்தான் பயந்தான். பேதுரு அந்த நேரத்தில் ஒரு சின்ன ஜெபத்தை ஏறெடுக் கிறான். “ஆண்டவரே இரட்சியும்” என்று கூப்பிட்டான்.
உடனே இயேசு கையை நீட்டி“அற்பவிசுவாசியே” என்று கோபப்பட்டுத் தூக்கினார். அவர்கள் படகில் ஏறினவுடன் காற்று அமர்ந்தது. ஜலத்தின்மேல் நடப்பதற்கு பயப்படாத பேதுரு, அதற்குச் சம்பந்தம் இல்லாத காற்றைப் பார்த்துப் பயப்பட் டான். அப்பொழுது படகில் உள்ளவர்கள் “உண்மையிலேயே நீர் மெய்யான தேவன்” என்று இயேசுவைப் பணிந்து கொண்டனர். வாஞ்சையும், விசுவாசமும் உள்ளவர்களால் மட்டுமே அற்புதத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று பேதுருவிடமிருந்து நாம் கற்றுக்கொள்கிறோம். பேதுரு அமிழ்ந்து போகையில் இயேசுவின் கரம் உடனே பேதுருவைத் தூக்கி எடுத்ததைப் போல, இயேசு நம்மு டைய போராட்டங்களிலும், கஷ்டங்களிலுமிருந்து உடனடி தீர்வை அவருடைய கரத்தினால் தருவார். கர்த்தர் பாதாளத்தின் வல்லமையிலிருந்து நம்மை இரட்சி க்கிறார். பாவ பழக்க வழக்கத்திலிருந்தும் நம்மை இரட்சிக்கிறார். சத்துருக்களின் பிடியிலிருந்தும் பிசாசின் பிடியிலிருந்தும் நம்மை இரட்சிக்கிறார். இரட்சிப்பின் ஒளியையும், பிரகாசத்தையும் நமக்குள் வீசச் செய்கிறார். மத்தேயு 17 : 1 – 7 ல் இயேசு பேதுருவையும், யோவானையும், யாக்கோபையும் அழைத்துக் கொண்டு தனித்திருக்கும்படி உயர்ந்த மலையின் மேல் போய் அவர்களுக்கு முன்பாக மறுரூபமானார். அங்கு அவர்கள் கண்ட காட்சியும், கேட்ட கர்த்தரின் சத்தமும் அவர்களைப் பயத்தில் ஆழ்த்தி, முகங்குப்புற விழுந்தார்கள். அப்பொழுது இயேசுவின் அன்புக் கரம் அவர்களைத் தொட்டு பயப்படாதேயுங்கள் என்றது. இயேசுகிறிஸ்து நம்மைத் தொடும்போது நமக்குள் இருக்கிற பயங்களெல்லாம் மறையும். ஏனென்றால் வேதம் நமக்கு,
2 தீமோத்தேயு 1 : 7 ல் “தேவன் நமக்குப் பயமுள்ள ஆவியைக் கொடாமல், பலமும் அன்பும் தெளிந்த புத்தியுமுள்ள ஆவியையே கொடுத்திருக்கிறார்.” ஆமென்.
பெரும்பாடுள்ள ஸ்திரீயின் பயத்தை இயேசு போக்கினார்:
பெரும்பாடுள்ள ஸ்திரீ:
மாற்கு 5 : 25,26 “அப்பொழுது 12 வருஷமாய்ப் பெரும்பாடுள்ள ஒரு ஸ்திரீ, அனேக வைத்தியர்களால் மிகவும் வருத்தப்பட்டு, தனக்கு உண்டானவைகளை எல்லாம் செலவழித்தும், சற்றாகிலும் குணமடையாமல் அதிக வருத்தப்படுகிற பொழுது,”
இயேசு யவீரு என்ற ஜெபஆலயத்தலைவனின் மகள் மரணத்தருவாயில் இருப்ப தால் அவளைக் குணமாக்க சென்று கொண்டிருக்கும் போது, திரளான ஜனங்கள் அவரை நெருக்கிக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது ஒரு பெரும்பா டுள்ள ஸ்திரீ இயேசுவினிடத்தில் வந்தாள். பன்னிரண்டு வருஷங்களாக அந்த வியாதியோடு மிகவும் கஷ்டத்தை அனுபவித்து கொண்டிருந்தவள். தன் செல்வத் தையெல்லாம் செலவழித்தும், அனேக வைத்தியர்களைப் பார்த்தும், அந்த வியா தியிலிருந்து அவளுக்குச் சுகம் கிடைக்கவில்லை. பெரும்பாடுள்ள உதிரப் போக் கின் போது அவள் யாரையாவது தொட்டால் தீட்டாகிவிடும். அப்படிப்பட்டவர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர மாட்டார்கள். ஆனால் இந்தப் பெண் தன்னுடைய நோயின் கொடூரத்தினால் வெளியே வந்தாள்.
பெரும்பாடுள்ள பெண் எடுத்த தீர்மானம்:
மாற்கு 5 : 27, 28 “இயேசுவைக் குறித்து கேள்விப்பட்டு: நான் அவருடைய வஸ்திரங்களையாகிலும் தொட்டால் சொஸ்தமாவேன் என்று சொல்லி; ஜனக்கூட்டத்துக்குள்ளே அவருக்குப் பின்னாக வந்து, அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள்.”
இந்தப் பெண் இயேசுவால் குஷ்டரோகிகள் குணமாக்கப் பட்டதையும், குருடர் களைப் பார்வையடையச் செய்ததையும், செவிடர்களைக் கேட்கச் செய்ததையும், தீராத நோய்கள் கூட இயேசுவால் குணமாக்கப் பட்டதையும் கேள்விப்பட்டி ருந்தாள். அவருடைய வஸ்திரத்தைத் தொட்ட யாவரும் சுத்தமானார்கள் என்ப தையும் (மாற்கு 6 : 56) கேள்விப்பட்டிருந்தாள். அவள் கேள்விப்பட்டதை நம்பி தான் தீட்டாக இருந்தாலும் இன்றைக்கு நான் இயேசுவின் வஸ்திரத்தின் ஓரத்தை யாகிலும் தொட்டு சுகமடைவேன் என்று தீர்மானம் பண்ணினாள். வியாதியின் உக்கிரமானது அவளை அவ்வாறு எண்ண வைத்தது. எனவே தடைகளை யெல்லாம் உதறித் தள்ளிவிட்டு, இயேசுவின் வல்லமையைத் தேடி ஓடி வந்தாள்.
இயேசுவைச் சுற்றி திரளான ஜனங்கள் நெருக்கிக் கொண்டிருந்த போதும், தன்னு டைய நம்பிக்கையைத் தளரவிடாமல் அந்தக் கூட்டத்துக்குள் நுழைந்தாள். யாருமறியாமல் இயேசுவின் அருகில் சென்று, இயேசுவுக்குத் தெரியாதபடி, இயேசுவிடம் எதுவும் கூறாமல் அவருடைய வஸ்திரத்தைத் தொட்டாள். இயேசு வின் வஸ்திரத்தில் வல்லமையும் அபிஷேகமும் இருந்தது. வியாதியஸ்தர்கள் இயேசுவைத் தொடுவதைக் குறித்துப் பல இடங்களில் பார்க்கிறோம். அதேபோல் இயேசு வியாதியஸ்தர்களைத் தொடுவதைக் குறித்தும் வேதத்தில் பல இடங் களில் பார்க்கிறோம், இயேசு அவருடைய சரீரத்தில் நம்முடைய பாவங்களைச் சிலுவையின் மேல் சுமந்தார். அவருடைய தழும்புகளால் குணமாகிறோம். (1 பேதுரு 2: 24)
அந்தப் பெண் பெற்ற அற்புத சுகம்:
மாற்கு 5 :29 30 “உடனே அவளுடைய உதிரத்தின் ஊறல் நின்று போயிற்று; அந்த வேதனை நீங்கி ஆரோக்கியமடைந்ததை அவள் தன் சரீரத்தில் உணர்ந்தாள். உடனே இயேசு தம்மிலிருந்து வல்லமை புறப்பட்டதைத் தமக்குள் அறிந்து, ஜனக்கூட்டத்துக்குள்ளே திரும்பி: தன் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார்.”
இயேசுவின் வஸ்திரத்தை தொட்டவுடன், அந்தப் பெண்ணின் உதிரத்தின் ஊறல் நின்றது. அந்தப் பெண் அந்த அற்புதத்தை சுதந்தரித்தாள். தெய்வீக ஆரோக் கியத்தைப் பெற்றுக் கொண்டாள். சகரியா 9 :12 ல் “இரட்டிப்பான நன்மையைத் தருவேன் இன்றைக்கே தருவேன்” என்று வாக்குப்பண்ணின கர்த்தர் அன்றைக்கே அவளுடைய நோயிலிருந்து விடுதலை கொடுத்தார். அவள் தான் ஆரோக்கிய மானதை தன் சரீரத்தில் உணர்ந்தாள். இயேசு தன்னுடைய வல்லமை தமக் குள்ளிருந்து வெளியே போனதை உணர்ந்தார். எனவே ஜனக்கூட்டத்தைத் திரும்பி பார்த்து என் வஸ்திரங்களைத் தொட்டது யார் என்று கேட்டார். தன் வஸ்திரங்களை யாரோ தொட்டதை இயேசு அறிந்தார். சீஷர்கள் இயேசுவிடம் இத்தனை திரளான ஜனங்கள் நெருக்கிக் கொண்டிருக்கும் இந்த வேளையில் உம்மைத் தொட்டது யார் என்று எவ்வாறு கண்டுபிடிப்பது என்ற கேள்வியைக் கேட்டனர் (மாற்கு 5 : 31, 32). கர்த்தர் அனைத்தும் அறிந்தவர். எபிரேயர் 4 : 13 ல் அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை என்றும், சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும், வெளியரங்கமாயும் இருக்கிறது என்றும் பார்க்கிறோம். இயேசு தன்னை தொட்டது யார் என்று பார்ப்பதற்காக ஜனங்களைச் சுற்றிலும் பார்த்தார்.
இயேசு அந்தப் பெண்ணின் பயத்தைப் போக்கினார்:
மாற்கு 5 : 33, 34 “ தன்னிடத்திலே சம்பவித்ததை அறிந்த அந்த ஸ்திரீயானவள் பயந்து, நடுங்கி, அவருக்கு முன்பாக விழுந்து, உண்மையையெல்லாம் அவருக்கு சொன்னாள். இயேசு அவளைப் பார்த்து: மகளே, உன் விசுவாசம் உன்னை இரட்சித்தது, நீ சமாதானத்தோடே போய், உன் வேதனை நீங்கி, சுகமாயிரு என்றார்.”
சாதாரண கூட்டத்தின் நெரிசலில் ஒருவர் தொடுவதற்கும், விசுவாசத்தினால் இயேசுவை ஒருவர் தொடுவதற்கும் வேறுபாடு உண்டு. இயேசு இதையறிந்து விட்டாரே என்று அந்தப் பெண் பயத்தில் நடுங்கினாள். தன்னுடைய சரீரத்தில் ஏற்பட்ட மாற்றத்தையும், அவள் பன்னிரண்டு வருடங்களாகத் தன் சரீரத்தில் ஏற்பட்ட வேதனைகளையும், அதற்குத்தான் எடுத்த தீர்மானத்தையும், அதனால் இயேசுவின் வஸ்திரத்தைத் தொட்டதையும் இயேசுவிடம் கூறினாள். இயேசு எதற்காக அவளைப் பார்த்தாரென்றால், அந்தப் பெண் தான் பெற்றுக்கொண்ட உடல் சுகத்தை, அற்புதத்தை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வைக்க முயன் றாள். ஆனால் இயேசு ஜனங்களுக்கு முன்பாக அதை அறிவிக்க வேண்டும் என்று விரும்பினார். இயேசு அவள் எடுத்த முடிவையும், அவளுடைய விசுவாசத்தை யும், செயலையும் பார்த்தார். எனவே அந்தப் பெண்ணைப் பார்த்து உன் விசுவா சம் உன்னை இரட்சித்தது என்றும், சமாதானத்தோடு போ என்றும், உன் வேதனை யெல்லாம் நீங்கி விட்டது என்றும், இனி நீ சுகமாயிருப்பாய் என்றும் கூறினார்.
விசுவாசத்தினால் தேவனிடமிருந்து நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை, இந்த அற்புதத்தின் மூலம் நாம் கற்றுக்கொள்கிறோம். எந்த நேரத்திலும் எந்த நிலைமையிலும், நாம் இயேசுவிடம் சென்றால் இயேசு நம்மை கண்ணோக்குகிறவராக இருக்கிறார். நம்பிக்கையுடன் இயேசுவை நெருங்கு வோம். இயேசுவின் அபிஷேகத்தின் வஸ்திரம் நம் மேல் விழும்படி செய்வார். 12 வருடங்களாக அவதிப்பட்ட அந்தப் பெண்ணுக்கு, அந்த நோயிலிருந்தும், அவளு டைய பயத்திலிருந்தும் இயேசு விடுதலை கொடுத்ததைப் போல,. நம்முடைய வாழ்க்கையிலும் நம்முடைய வாழ்க்கையின் பிரச்சனைகளுக்கு முடிவு கட்ட நாம் இயேசுவைத் தேடிச் சென்று அதிலிருந்து விடுதலை பெறுவோம். ஆமென்.