Menu Close

ஆபிரகாமுக்கு அக்கினியால் கர்த்தரின் பதில்: ஆதியாகமம் 15:9-17

ஆபிரகாம் சோதோம் ராஜாவுடன்:

ஆபிரகாம் தன்னுடைய சகோதரனாகிய லோத்து சோதோம் கொமோராவில் இருக்கும்போது சோதோம் ராஜாவை எதிர்த்து, ஐந்து ராஜாக்கள் சண்டை யிட்டு அங்குள்ளவர்களைக் கொண்டு போய் விட்டார்கள். அதனால் ஆபிரகாம் தன்னோடிருந்த பயிற்சி பெற்ற 318 பராக்கிரமசாலிகளைக் கூட்டிக்கொண்டு அந்த ஐந்து ராஜாக்களோடு சண்டையிட்டு அவர்களை ஓடஓட விரட்டினார். இராஜாக்களுடன் சண்டையிட்ட பின்னர் ஆபிரகாம் குழப்பமும் பயமும் நிறைந் தவானானார். சோதோம் ராஜாவிடம் பொருட்கள் ஒன்றும் வேண்டாமென்றார்.

ஆபிரகாமும் கர்த்தரும்: ஆதியாகமம் 15 : 1 – 5

அந்த விசுவாசத்தைப் பார்த்த கர்த்தர் ஆபிரகாமின் தரிசனத்தில் தோன்றித் தான் அவனுக்குப் பெரிய பலனும் கேடகமுமாக இருக்கிறதாகக் கூறினார். தேவன் தம்மை நோக்கிப் பார்க்கிறவர்களுக்குக் கொடுக்கும் காரியம் மிகவும் பெரியது. ஆபிரகாம் எல்லாக் காரியத்திற்கும் கர்த்தரையே நம்பினார். ஆபிர காம் கர்த்தரிடம் தனக்கு ஒரு குமாரன் வேண்டுமென்றும் தன்னுடைய வீட்டி லுள்ள விசாரணைக்காரனைத் சுதந்தரவாளியாக இருக்கிறானே என்றார். “தனக்கு ஒரு குமாரனைக் கொடுப்பதாகக் கூறினீர் (ஆதியாகமம் 11 : 30), உன் சந்ததி கடற்கரை மணலைப் போலிருக்கும் என்று கூறினீர், உன்னை பலத்த ஜாதியாக்குவேன் என்றீரே” என்று கர்த்தரிடம் கேட்டார். உடனே கர்த்தர்,

ஆதியாகமம் 15 : 4, 5 “அப்பொழுது கர்த்தருடைய வார்த்தை அவனுக்கு உண்டாகி: இவன் உனக்குச் சுதந்தரவாளியல்ல, உன் கர்ப்பப்பிறப்பா யிருப்பவனே உனக்குச் சுதந்தரவாளியாவான் என்று சொல்லி, அவர் அவனை வெளியே அழைத்து: நீ வானத்தை அண்ணாந்து பார், நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு என்று சொல்லி; பின்பு அவனை நோக்கி: உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும் என்றார்.”

ஆபிரகாமின் கருத்தை கர்த்தர் நிராகரித்து, தான் அவனுக்கு கொடுக்கப் போகும் குமாரனே அவனுக்குச் சுதந்தரவாளி என்றார். அதோடு நிறுத்தாமல் ஆபிரகாமை வெளியே அழைத்துப்போய் வானத்து நட்சத்திரங்களைப் போல ஆபிரகாமின் சந்ததி எண்ணி முடியாததாயிருக்கும் என்றார். கலாத்தியர் 3 : 9 ல் விசுவாச மார்க்கத்தார் எவர்களோ அவர்களனைவரும் ஆபிரகாமின் பிள்ளை களென்றும், 3 : 29 ல் கிறிஸ்துவினுடையவர்கள் அனைவரும் ஆபிரகாமின் சந்ததியார் என்றும் பவுல் கூறியுள்ளார்.

ஆபிரகாமின் விசுவாசம்: 

ஆதியாகமம் 15 : 6 “அவன் கர்த்தரை விசுவாசித்தான், அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.”

இந்த வசனம் வேதத்தில் முக்கியமான வசனம். ஆபிரகாம் கர்த்தரை விசுவா சித்தான் அதை கர்த்தர் அவனுக்கு நீதியாக எண்ணினார். இதிலிருந்து ஆபிர காமின் வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின்தான் ஆபிரகாமின் விசுவாச வாழ்க்கை ஆரம்பமாகிறது. புதிய ஏற்பாட்டில் நான்கு இடங்களில் இந்த வசனம் மேற்கோள் காட்டப்பட்டிருக்கிறது. ரோமர் 4 : 3, 9 கலாத்தியர் 3 : 6, யாக்கோபு 2 : 23 ஆபிரகாம் கிரியையினாலல்ல. விசுவாசத் தினால் நீதிமானாக்கப்பட்டார். ஆபிரகாம் தேவனுடைய வார்த்தையை விசுவா சித்தான் அதனால் தன்னுடைய ஊர் என்ற கல்தேயாவை விட்டுப் புறப்பட்டார். விசுவாசம் கிரியை நடப்பித்தது. பின்பு அதற்கு அடையாளமாக விருத்த சேதனத்தையும் பெற்றார். அதனாலும் அவர் நீதிமானாக்கப்படவில்லை. விசுவா சம் கிரியையின்றி நிலைத்திராது. அது நற்கிரியை செய்து கொண்டிருக்கும். ஆனால் நற்கிரியையினால் தேவ ஈவை யாரும் விலையாகப் பெற முடியாது. தேவன் அதனை இலவசமாக விசுவாசம் வழியாக வழங்குவார்.

ஆபிரகாம் கர்த்தர் கூறியபடி செய்த பலி: 15 : 9 –21

இந்த உடன்படிக்கை கானானில் வைத்துச் செய்யப்பட்டது. இந்த அதிகார த்தில் ஆபிரகாம் பேசினது கொஞ்சம். கர்த்தர் பேசினதுதான் அதிகம். கர்த்தரா கிய தேவன் இறங்கி வந்து ஒரு மனுஷனோடு உடன்படிக்கை பண்ணுகிறார். ஆபிரகாம் தான் கர்த்தர் கூறியவைகளைப் பெறுவேனென்று எதனால் அறிவேன் என்றார். இதேபோல் சகரியாவிடம் தேவதூதன் உன் மனைவியாகிய எலிசபெத்து ஒரு குமாரனைப் பெறுவாள் என்று கூறிய போது சகரியா இதை தான் எதனால் அறிவேன் என்று கேட்டதை லூக்கா 1 : 13, 18 ல் காணலாம். அதற்குக் கர்த்தர் மூன்று வயதுக் கிடாரி, மூன்று வயது வெள்ளாடு, மூன்று வயது ஆட்டுக்கடா, ஒரு காட்டுப் புறா, ஒரு புறாக்குஞ்சு, இவைகளையெல்லாம் கர்த்தரிடம் கொண்டு வந்து பலியிடச் சொன்னார். கர்த்தர் கூறிய படி ஆபிரகாம் அவைகள் எல்லாவற்றையும் கொண்டு வந்து அவைகளை இரண்டாகத் துண்டித்து, அந்த வெட்டிய துண்டங்களை ஒன்றுக்கொன்று எதிராக வைத்தான். உடன்படிக்கை செய்யும் இரு குழுவினரும் கொல்லப்பட்ட மிருக த்தின் இந்த இரண்டு பாதிக்கும் நடுவே நடந்து செல்வார்கள்.

இதன் பொருள் என்னவெனில் அப்போது செய்யப்படும் ஒப்பந்தத்தை எவரா வது மீறினால் அவர்கள் அழிந்து, வெட்டப்பட்ட இந்த மிருகத்தைப் போலாவா ர்கள் என்பதாகும் (எரேமியா 34 : 18). பட்சிகளை மட்டும் துண்டிக்கவில்லை மாம்ச பட்சியான பறவைகள் துண்டங்களின் மேல் இறங்கியதால் ஆபிரகாம் அவைகளை விரட்டினார். சூரியன் அஸ்தமிக்கும் நேரத்தில் ஆபிரகாம் தூங்கி விடுகிறார். கர்த்தர் ஆபிரகாமுக்கு நித்திரையைக் கொடுத்துக் காரிருள் அவரை மூடிக்கொள்ளும்படி செய்கிறார். ஏனென்றால் கர்த்தர் அந்தப் பலிகளினுடே கடந்து சென்று வாக்குத்தத்தங்களைக் கொடுக்க நினைத்திருப்பதால். கர்த்தர் ஏவாளை உண்டாக்கும் போதும் ஆபிரகாமுக்கு அயர்ந்த நித்திரை வரப்பண்ணியதை ஆதியாகமம் 2 : 21 ல் பார்க்கிறோம். எபிரேய ஜனங்கள் 3 முறை தங்கள் தேசத்தை விட்டு வெளியே விரட்டப்பட்டார்கள். கர்த்தர் ஆபிரகாமிடம் உன்னுடைய சந்ததியார் அந்நிய தேசத்தில் பரதேசிகளாக 400 வருஷம் உபத்திரவப்படுவார்கள் என்றும், தான் அவர்களை நியாயந் தீர்த்தபின் மிகுந்த பொருட்களுடன் புறப்பட்டு வருவார்கள் என்றும் (யாத்திராகமம் 12 : 40), நாலாம் தலைமுறையில்தான் அவர்கள் திரும்ப வருவார்கள் என்றும் வாக்குரைத்தார். யாத்திராகமம் 3 : 8, 17 லும் கர்த்தர் இஸ்ரவேலரை எகிப்தின் சிறுமையிலிருந்து நீக்கி, பாலும் தேனும் ஓடுகிற தேசமாகிய கானானியர் ஏத்தியர் எமோரியர் பெரிசியர் ஏவியர் எபூசியருடைய தேசத்துக்குக் கொண்டுபோவேன் என்றார்.

அதைப் பார்ப்பதற்கு நீ இருக்கமாட்டாயென்றும், 400 ஆண்டுகள் என்பது ஆபிராம் தனது 75 வது வயதில் எகிப்துக்குச் சென்றதிலிருந்து கணக்கிடப்பட்டுள்ளது. லேவியின் மகனான கோகாத், அம்ராம், மோசே, கெர்சோம் என்ற நாலு தலைமுறைகளில் விடுதலைப் பயணம் நடைபெற்றது (யாத்திராகமம் 6 : 16 – 20, 2 : 21, 22). எமோரியரின் அக்கிரமம் இன்னும் நிறைவாகவில்லை என்றார். சூரியன் அஸ்தமித்தபோது காரிருள் உண்டானது துண்டங்களின் நடுவே புகை கிற சூளையும், அந்தத் துண்டங்களின் நடுவே அக்கினிஜ்வாலையும் தோன்றச் செய்தார் (ஆதியாகமம் 15 : 17). இவ்வாறு கர்த்தர் ஆபிரகாமோடு உடன்படிக்கை பண்ணி, எகிப்துநதி துவங்கி, ஐபிராத்துநதி என்னும் பெரிய நதி மட்டும் உள்ள தேசத்தை ஆபிரகாமின் சந்ததிக்கு கொடுப்பேன் என்று வாக்களித்தார். இதை யோசேப்பு தன் சகோதரர்களிடம் ஆதியாகமம் 50 : 24 ல் “யோசேப்பு தன் சகோதரரை நோக்கி: நான் மரணமடையப் போகிறேன்; ஆனாலும் தேவன் உங்களை நிச்சயமாய்ச் சந்தித்து, நீங்கள் இந்தத் தேசத்தை விட்டு, தாம் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்டுக் கொடுத்திருக்கிற தேசத்துக்குப் போகப் பண்ணுவார்” என்று கூறியதைப் பார்க்கிறோம். ஆமென்.

Related Posts