திருமணமென்பது தேவனுடைய சித்தம், ஒருவனுக்கு ஒரு மனைவி ஆவலுடன் திருமண வாழ்க்கை என்பதாகும். ஆதி 2:24 உன் 2:7, 4:12 இதற்கு இயேசு ஒரு விதிவிலக்கையளிக்கிறார். அதாவது திருமண வாழ்வில் உண்மையற்ற நிலை, விபச்சாரம், வேசித்தனம், பாலுறவில் ஒழுக்கக்கேடு – மத் 5:32 இவைகளில் சீர்கேடுகள் காணப்பட்டால் விவாகரத்து செய்யலாம் என்று கூறப்படுகிறது. திருமணத்துக்கு முன் பெண் கற்பிழந்தவள் என்று கண்டுகொண்டால் அவளைத் தள்ளிவிடலாம் என்று பழைய ஏற்பாடு கூறுகிறது உபா 24:1-4 அதேபோல் திருமணத்துக்குப்பின் கணவன் மனைவியினிடத்தில் ஒழுக்கக்கேடு காணப்பட்டால் பழைய ஏற்பாட்டு விதிகளின்படி அவர்கள் திருமண முறிவு செய்து கொள்ளலாம் – லேவி 20:10 உபா 22:22 விவாகரத்து செய்து கொண்டபின் அவர்கள் வேறு திருமணம் செய்து கொள்ளலாம்.