Menu Close

பிறந்தநாள் வாழ்த்துக்கள் – பைபிள் வசனங்கள்

  1. ஆதியாகமம் 12 : 2 “நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன், நீ ஆசீர்வாதமாய் இருப்பாய் .”
  2. ஆதியாகமம் 17 : 2 “கர்த்தர் உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப் பண்ணுவார்.”
  3. எண்ணாகமம் 6 : 24, 25, 26 “கர்த்தர் உன்னை ஆசீர்வதித்து, உன்னைக் காக்கக்கடவர்.”
    “கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரகாசிக்கப்பண்ணி, உன் மேல் கிருபையாயிருக்கக்கடவர்.”
    “கர்த்தர் தம்முடைய முகத்தை உன்மேல் பிரசன்னமாக்கி, உனக்குச் சமாதானம் கட்டளையிடக்கடவர்.”
  4. உபாகமம் 1 : 11 “நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக.”
  5. உபாகமம் 7 : 14 “சகல ஜனங்களைப் பார்க்கிலும் நீ ஆசீர்வதிக்கப் பட்டிருப்பாய்;”
  6. உபாகமம் 15 : 5 “உன் தேவனாகிய கர்த்தர் உனக்குச் சுதந்தரிக்கும்படி கொடுக்கும் தேசத்தில், உன்னை மேன்மேலும் ஆசீர்வதிப்பார்.”
  7. உபாகமம் 28 : 3, 4, 5 “நீ பட்டணத்திலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்; வெளியிலும் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பாய்.”
    “உன் கர்ப்பத்தின் கனியும், உன் நிலத்தின் கனியும், உன் மாடுகளின் பெருக்கமும், உன் ஆடுகளின் மந்தைகளுமாகிய உன் மிருகஜீவன்களின் பலனும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கும்.”
    “உன் கூடையும், மாபிசைகிற உன் தொட்டியும் ஆசீர்வதிக்கப்பட்டிரு க்கும்.”
  8. உபாகமம் 26 : 19 “நான் உண்டுபண்ணின எல்லா ஜாதிகளைபார்க்கிலும் புகழ்ச்சியிலும் கீர்த்தியிலும் மகிமையிலும் உன்னைச் சிறந்திருக்கும்படி செய்வேன்.”


    Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

    தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்


  9. உபாகமம் 28 : 8 “கர்த்தர் உன் களஞ்சியங்களிலும், நீ கையிடும் எல்லா வேலையிலும் உனக்கு ஆசீர்வாதம் கட்டளையிடுவார்; உன் தேவனாகிய கர்த்தர் உனக்குக் கொடுக்கும் தேசத்திலே உன்னை ஆசீர்வதிப்பார்.”
  10. சங்கீதம் 20 : 4 “கர்த்தர் உமது மனவிருப்பத்தின்படி உமக்குத் தந்தருளி, ஆலோசனைகளையெல்லாம் நிறைவேற்றுவாராக.”
  11. சங்கீதம் 37 : 4 “கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.”
  12. சங்கீதம் 91 : 11 “உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்.”
  13. சங்கீதம் 118 : 24 “இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம்.”
  14. ஏசாயா 45 : 4 “வெண்கலக் கதவுகளை உடைத்து, இருப்புத் தாழ்ப்பாள்களை முறித்து, அந்தகாரத்தில் இருக்கிற பொக்கிஷங்களையும், ஒளிப்பிடத்தில் இருக்கிற புதையல்களையும் உனக்குக் கொடுப்பேன்.”
  15. ஏசாயா 58 : 11 “கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீர்பாய்ச்சலான தோட்டத்தைப் போலவும் வற்றாத நீருற்றைப்போலிருப்பாய்.”
  16. ஆகாய் 2 : 19 “நான் இன்று முதல் உங்களை ஆசீர்வதிப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.”
  17. எபிரேயர் 6 : 14 “நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து உன்னைப் பெருகவே பெருகப்பண்ணுவேன்.”
  18. 3 யோவான் 2 “உன் ஆத்துமா வாழ்கிறதுபோல நீ எல்லாவற்றிலும் வாழ்ந்து சுகமாயிருக்கும்படி வேண்டுகிறேன்.”

Click here to join our “தேவ வார்த்தை” Whatsapp Group for updates

தினமும் ஒரு தேவ வார்த்தையை பெற “Whatsapp Group” இல் சேரவும்

Related Posts