Menu Close

எதை பேசக்கூடாதென்று வேதம் எச்சரிக்கிறது

  1. கோள் சொல்லக்கூடாது
    லேவியராகமம் 19 : 16 – உன் ஜனங்களுக்குள்ளே அங்குமிங்கும் கோள்சொல்லித் திரியாயாக; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் கர்த்தர்.

  2. துர்செய்திகளைப் பரப்பக் கூடாது
    எண்ணாகமம் 13 : 33 – அந்தச் சொறியுள்ள இடந்தவிர, மற்ற யாவையும் அவன் சிரைத்துக்கொள்ளக்கடவன்; பின்பு, ஆசாரியன் இரண்டாந்தரம் அவனை ஏழு நாள் அடைத்துவைத்து,
  3. மேட்டிமையான பேச்சையும், அகந்தையான பேச்சையும் பேசக்கூடாது
    1சாமுவேல் 2 : 3 – இனி மேட்டிமையான பேச்சைப் பேசாதிருங்கள்; அகந்தையான பேச்சு உங்கள் வாயிலிருந்து புறப்படவேண்டாம்; கர்த்தர் ஞானமுள்ள தேவன்; அவர் செய்கைகள் யதார்த்தமல்லவோ?
  4. தீமையான வார்த்தைகளைப் பேசக்கூடாது
    யோபு 27 : 3 – என் உதடுகள் தீமையைச் சொல்வதுமில்லை; என் நாக்கு கபடம் பேசுவதுமில்லையென்று,
  5. புறங்கூறக் கூடாது
    சங்கீதம் 15 : 3 – அவன் தன் நாவினால் புறங்கூறாமலும், தன் தோழனுக்குத் தீங்குசெய்யாமலும், தன் அயலான்மேல் சொல்லப்படும் நிந்தையான பேச்சை எடுக்காமலும் இருக்கிறான்.
  6. பொய்யான வார்த்தைகளைப் பேசக்கூடாது
    சங்கீதம் 63 : 11 – ராஜாவோ தேவனில் களிகூருவார்; அவர்பேரில் சத்தியம்பண்ணுகிறவர்கள் யாவரும் மேன்மைபாராட்டுவார்கள்; பொய் பேசுகிறவர்களின் வாய் அடைக்கப்படும்.
  7. கசப்பான வார்த்தைகளைப் பேசக்கூடாது
    சங்கீதம் 64 : 4 – மறைவுகளில் உத்தமன்மேல் எய்யும்பொருட்டுக் கசப்பான வார்த்தைகளாகிய தங்கள் அம்புகளை நாணேற்றுகிறார்கள்; சற்றும் பயமின்றிச் சடிதியில் அவன்மேல் எய்கிறார்கள்.
  8. கடினமாகப் பேசக்கூடாது
    சங்கீதம் 94 : 4 – எதுவரைக்கும் அக்கிரமக்காரர் யாவரும் வாயாடி, கடினமாய்ப் பேசி, பெருமைபாராட்டுவார்கள்?
  9. கபடமான வார்த்தைகளைப் பேசக்கூடாது
    சங்கீதம் 120 : 2, 3 – கர்த்தாவே, பொய் உதடுகளுக்கும் கபடநாவுக்கும் என் ஆத்துமாவைத் தப்புவியும். கபடநாவே, உனக்கு என்ன கிடைக்கும்? உனக்கு என்ன செய்யப்படும்?
  10. மாயையான வார்த்தைகளைப் பேசக்கூடாது
    சங்கீதம் 144 : 8 – மாயையைப் பேசும் வாயும், கள்ளத்தனமான வலதுகையும் உடைய அந்நிய புத்திரரின் கைக்கு என்னை விலக்கித் தப்புவியும்.
  11. மனதைப் புண்படுத்தும் வார்த்தைகளைப் பேசக்கூடாது
    நீதிமொழிகள் 12 : 18 – பட்டயக்குத்துகள்போல் பேசுகிறவர்களும் உண்டு; ஞானமுள்ளவர்களுடைய நாவோ ஒளஷதம்.
  12. கடுஞ் சொற்களைப் பேசக்கூடாது
    நீதிமொழிகள் 15 : 1 – மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.
  13. தன்னைப் பற்றி பெருமை பேசக்கூடாது
    நீதிமொழிகள் 20 : 6 – மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?
  14. புகழ்ந்து பேசக்கூடாது
    நீதிமொழிகள் 27 : 2 – உன் வாய் அல்ல, புறத்தியானே உன்னைப் புகழட்டும்; உன் உதடு அல்ல, அந்நியனே உன்னைப் புகழட்டும்.
  15. பதற்றத்துடன் பேசக்கூடாது
    நீதிமொழிகள் 29 : 20 – தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்.
  16. ஓய்வுநாளில் சொந்தப்பேச்சை பேசக்கூடாது
    ஏசாயா 58 : 13 – என் பரிசுத்தநாளாகிய ஓய்வுநாளிலே உனக்கு இஷ்டமானதைச் செய்யாதபடி, உன் காலை விலக்கி, உன்வழிகளின்படி, நடவாமலும், உனக்கு இஷ்டமானதைச் செய்யாமலும், உன் சொந்தப்பேச்சைப் பேசாமலிருந்து, ஓய்வுநாளை மனமகிழ்ச்சியின் நாளென்றும், கர்த்தருடைய பரிசுத்த நாளை மகிமையுள்ள நாளென்றும் சொல்லி, அதை மகிமையாக எண்ணுவாயானால்,
  17. சொல்லாததைக் கூட்டிப் பேசக்கூடாது
    மத்தேயு 5 : 37 – உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.
  18. வீணான வார்த்தைகளைப் பேசக்கூடாது
    மத்தேயு 12 : 36 – மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்கவேண்டும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.
  19. மற்றவர்களை குற்றம் கூறும் வார்த்தைகளைப் பேசக்கூடாது
    ரோமர் 2 : 1 – ஆகையால், மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி, போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை; நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய்.
  20. ஆகாத சம்பாஷணைகள் கூடாது
    1 கொரிந்தியர் 15 : 33 – மோசம்போகாதிருங்கள்; ஆகாத சம்பாஷணைகள் நல்லொழுக்கங்களைக் கெடுக்கும்.
  21. வம்பான வார்த்தைகளையும், புத்தியீனமான வார்த்தைகளையும் பேசக்கூடாது 
    எபேசியர் 5 : 4 – அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.
  22. பரிகாசம் நிறைந்த வார்த்தைகளையும் பேசக்கூ டாது
    எபேசியர் 5 : 4 – அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.
  23. இச்சகமான வார்த்தைகளைப் பேசக்கூடாது
    1 தெசலோனிக்கேயர் 2 : 5 – நீங்களெல்லாரும் வெளிச்சத்தின் பிள்ளைகளும், பகலின் பிள்ளைகளுமாயிருக்கிறீர்கள்; நாம் இரவுக்கும் இருளுக்கும் உள்ளானவர்களல்லவே.
  24. கட்டுக்கதைகளைப் பேசக்கூடாது
    1தீமோத்தேயு 4 : 7 – சீர்கேடும் கிழவிகள் பேச்சுமாயிருக்கிற கட்டுக்கதைகளுக்கு விலகி, தேவபக்திக்கேதுவாக முயற்சிபண்ணு.
  25. தகாத காரியங்களைப் பேசக்கூடாது
    1தீமோத்தேயு 5 : 13 – அதுவுமல்லாமல், அவர்கள் சோம்பலுள்ளவர்களாய், வீடுவீடாய்த் திரியப்பழகுவார்கள்; சோம்பலுள்ளவர்களாய் மாத்திரமல்ல, அலப்புகிறவர்களாயும் வீணலுவற்காரிகளாயும் தகாத காரியங்களைப் பேசுகிறவர்களாயுமிருப்பார்கள்.
  26. பெருமையானவைகளைப் பேசக்கூடாது
    யாக்கோபு 3 : 5 – அப்படியே, நாவானதும் சிறிய அவயவமாயிருந்தும் பெருமையானவைகளைப் பேசும். பாருங்கள், சிறிய நெருப்பு எவ்வளவு பெரிய காட்டைக் கொளுத்திவிடுகிறது!
  27. யாரையும் சபித்தல் கூடாது
    யாக்கோபு 3 : 10 – துதித்தலும் சபித்தலும் ஒரேவாயிலிருந்து புறப்படுகிறது. என் சகோதரரே, இப்படியிருக்கலாகாது.
  28. தந்திரமான வார்த்தைகளைப் பேசக்கூடாது
    2 பேதுரு 2 : 3 – பொருளாசையுடையவர்களாய், தந்திரமான வார்த்தைகளால் உங்களைத் தங்களுக்கு ஆதாயமாக வசப்படுத்திக்கொள்ளுவார்கள்; பூர்வகாலமுதல் அவர்களுக்கு விதிக்கப்பட்ட ஆக்கினை அயர்ந்திராது, அவர்களுடைய அழிவு உறங்காது.
  29. விரோதமான பொல்லாத வார்த்தைகளைப் பேசக்கூடாது
    3 யோவான் 10 – ஆனபடியால் நான் வந்தால், அவன் எங்களுக்கு விரோதமாய்ப் பொல்லாத வார்த்தைகளை அலப்பி, செய்துவருகிற கிருபைகளை நினைத்துக்கொள்வேன். அவன் இப்படிச் செய்துவருவதும் போதாமல், தான் சகோதரரை ஏற்றுக்கொள்ளாமலிருக்கிறதுமன்றி, ஏற்றுக்கொள்ள மனதாயிருக்கிறவர்களையும் தடைசெய்து, சபைக்குப் புறம்பே தள்ளுகிறான்.
  30. இறுமாப்பாண வார்த்தைகளைப் பேசக்கூடாது
    யூதா 16 – இவர்கள் முறுமுறுக்கிறவர்களும், முறையிடுகிறவர்களும், தங்கள் இச்சைகளின்படி நடக்கிறவர்களுமாயிருக்கிறார்கள்; இவர்களுடைய வாய் இறுமாப்பானவைகளைப்பேசும்; தற்பொழிவுக்காக முகஸ்துதி செய்வார்கள்.

Related Posts