Menu Close

மகனின் மரணத்தினால் நாயினூர் விதவை வடித்த கண்ணீர்: லூக்கா 7 : 11 – 16

நாயீன் ஊரில் இயேசு: 

லூக்கா 7 : 11, 12 “மறுநாளிலே இயேசு நாயீன் என்னும் ஊருக்கு போனார்; அவருடைய சீஷர் அநேகரும் திரளான ஜனங்களும் அவருடனேகூடப் போனார்கள். அவர் ஊரின் வாசலுக்குச் சமீபித்த போது, மரித்துப்போன ஒருவனை அடக்கம் பண்ணும் படி கொண்டு வந்தார்கள்; அவன் தன் தாய்க்கு ஒரே மகனாயிருந்தான். அவளோ கைம்பெண்பெண்ணாய் இருந்தாள்; ஊராரில் வெகு ஜனங்கள் அவருடனேகூட வந்தார்கள்.”

இயேசு நூற்றுக்கதிபதியின் வேலைக்காரனுக்கு அவனுடைய வீட்டிற்கு போகாமலே சுகம் கிடைக்கச் செய்தபின் நாயீன் என்ற ஊருக்குத் தன்னு டைய சீடர்களுடனும், திரளான ஜனங்களுடனும் சென்றார். இந்தக் கிரா மம் இசக்கார் கோத்திரத்தைச் சேர்ந்தது. கப்பர்நகூமிலிருந்து 12 மைல் தொலைவிலுள்ளது. இந்த ஊருக்குள் இயேசு ஒரே ஒரு முறைதான் சென் றார். இந்த ஊரில் இயேசு செய்த அற்புதம், அந்த ஊரை மிகவும் முக்கிய த்துவம் வாய்ந்ததாக மாற்றியது. அந்த ஊரின் வாசலுக்கருகில் இயேசு சென்றபோது, அந்த ஊரிலிருந்து புறப்பட்டு ஒரு ஊர்வலம் வந்து கொண் டிருந்தது. அந்த ஊர்வலத்தில் மரித்த ஒரு வாலிபனை அடக்கம் பண் ணும்படி கொண்டு வந்து கொண்டிருந்தனர். அந்த வாலிபனுக்குத் தகப்ப னில்லை. அவன் அந்தத் தம்பதியருக்கு ஒரே மகன். தாய் கைம்பெண்ணாக இருந்ததால், ஊரிலுள்ள அநேக ஜனங்கள் பாடைக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தனர். அந்தத் தாய் அழுது கொண்டே வந்து கொண்டிருந்தாள். அந்த ஊர்வலமும், இந்த ஊர்வலமும் நேருக்கு நேர் சந்தித்தது. “நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெ வனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்” (யோவான் 11:25,26) என்றவர் வருகிறார் என்பதையும், மரணத்திற்கும், பாதாளத்திற்கு திறவு கோலையுடையவர் வருகிறார் என்பதையும் அவர்கள் அறியவில்லை. இந்த இரண்டு கூட்டமும் ஒன்றையொன்று சந்திக்கின்றன. இது தற்செய லாக நடந்த சம்பவமல்ல. இயேசுவானவர் எங்கு சென்றாலும் ஒரு திட்ட த்தோடு தான் செல்வார். ஒரு இடத்திற்கு அவர் போகாமலிருந்தாலும் அதற்கும் ஒரு நோக்கமிருக்கும். லூக்கா 11 ம் அதிகாரத்தில் லாசரு இறந்து போன பின்பு அதை இயேசு அறிந்த பின்பும் இரண்டுநாள் தாமதமாகித் தான் சென்றார். அவர் உடனே போயிருந்தால் லாசருவைத் தொட்டு சுகமா க்கியிருப்பார். அந்தச் செயல் அந்த வீட்டிலுள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். ஆனால் செத்து நான்கு நாட்களுக்குப் பின் நாறிப்போன பிணம் என்று ஊரே அறிந்த பின்பு அந்தப் பிணத்தை இயேசு எழுப்பி னதினால் அந்த ஊரிலுள்ள அனைவரும் இயேசுவின் வல்லமையையும் அவர் யாரென்றும் அறிந்தனர். 

இயேசு செய்த அற்புதம்:

லூக்கா 7 : 13, 14 “ கர்த்தர் அவளைப் பார்த்து, அவள் மேல் மனதுருகி: அழாதே என்று சொல்லி, கிட்டவந்து, பாடையைத் தொட்டார்; அதைச் சுமந்தவர்கள் நின்றார்கள்; அப்பொழுது அவர்:வாலிபனே, எழுந்திரு என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.”

இயேசு அந்த மரண ஊர்வலத்தைப் பார்த்து விலகிச் செல்லவில்லை. எரிகோ வீதியில் குற்றுயிராய்க் கிடந்த மனிதனைப் பார்த்து லேவியனும், ஆசாரியனும் விலகிப் போனார்கள். ஆனால் இயேசு மனதுருக்கம் உள்ள வர். தனது பிள்ளைகளின் கண்ணீரைப் பார்க்கிறவர். அந்த விதவைத்தாய் யாருமற்ற அநாதையாய் ஆகிவிட்டதை இயேசு பார்த்தார். இயேசுவுக்கு எப்பொழுதும் விதவைகளின்மேல், திக்கற்றவர்களின்மேல் அனுதாபமும், இரக்கமும் உண்டு. அந்த மனதுருக்கத்துடன் இயேசு அந்தத் தாயைப் பார் த்து அழாதே என்று ஆறுதலாகக் கூறினார். மற்றவர்கள் அழாதே என்று சொல்வதற்கும், இயேசு அழாதே என்று சொல்வதற்கும் ஒரு பெரிய வித் தியாசம் உண்டு. மற்றவர்கள் அழாதே என்று எத்தனை தரம் கூறினாலும் ஆறுதல் பெறவே முடியாது. ஆனால் அழாதே என்று சொல்லுகிற இயேசு அவனை உயிரோடெழுப்பிக் கொடுக்க வல்லவர். ஆனால் அவர்கள்யாரும் இயேசுவிடம் வந்து அந்த மகனை உயிரோடெழுப்பும்படி கேட்கவில்லை. இயேசு அழாதே என்று சொல்லி அதோடு நின்று விடாமல், அந்த வாலிபன் படுத்திருந்த பாடையைத் தொட்டார். பிரேதத்தைத் தொடவில்லை. இதே போல் லூக்கா 8 :52ல் ஜெபஆலயத் தலைவனின் குமாரத்தி மரித்துப் போய் அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் அழுது துக்கமாக இருக்கும் போது இயேசு அவர்களைப் பார்த்து “அழாதேயுங்கள், அவள் மரித்துப் போகவில்லை, நித்திரையாயிருக்கிறாள்” என்றதைப் பார்க்கிறோம்.

மரித்தவர்களைப்பற்றிய கர்த்தருடைய கட்டளை என்னவென்றால், மரித்த பிரேதத்தைத் தொட்டவன் ஏழு நாட்கள் தீட்டுப்பட்டிருப்பான். ஏழு நாட்கள் அவர்கள் பலி செலுத்த முடியாதென்று ஆகாய்2:13 ல் பார்க்கிறோம். பிண த்தால் தீட்டுப்பட்டவன் அவைகளில் எதையாகிலும் தொட்டால் அது தீட்டு ப்படுமா என்று கேட்டதற்கு ஆசாரியர் பிரதியுத்தரமாக தீட்டப்படும் என்றா ர்கள் எசேக்கியேல் 44 : 25 ல் தகப்பன், தாய், குமாரன், குமாரத்தி, சகோதரர், புருஷனுக்கு வாழ்க்கைப்படாத சகோதரி, என்னும் இவர்களுடைய சவத் தினால் தீட்டுப்படலாமேயல்லாமல் அவர்களில் ஒருவனும் செத்த ஒருவனிடத் தில் போய் தீட்டுப்படலாகாது என்றுள்ளது. 

இயேசு பாடையைத் தொட்டதும் சுமந்த நான்கு பேரும் அப்படியே நின்று விட்டார்கள். இயேசுவின் வல்லமை அந்தப் பாடையின் வழியாக அந்த வாலிபனுக்குள் சென்றிருக்கும். மரணம் ஏற்படுவதற்கான நான்கு காரண ங்களை வேதம் கூறுகிறது. 1) பாவத்தின் விளைவினால் மரணம் வருகி றது. (ரோமர்6:23) 2) மாம்ச சிந்தையானது மரணத்தைக் கொண்டு வருகி றது. (ரோமர் 8 : 6, 13) 3) லௌகீக துக்கமோ மரணத்தைக் ஏற்படுத்துகிறது. (2 கொரிந்தியர்7:10) 4) இச்சையானது கர்ப்பம் தரித்து பாவத்தைக் கொண்டு வருகிறது.(யாக்கோபு1:15) பாவம் பூரணமாகும் போது மரணம் ஏற்படுகிறது இந்த நான்கையும் கொண்டு, நமது ஆத்மாவின் நிலையை நாம் சோதித் துப் பார்க்கலாம். இயேசு ஜீவன்உண்டாயிருக்கவும் அது பரிபூரணப்படவும் வந்தார். “வாலிபனே எழுந்திரு” என்று இயேசு சொன்ன வார்த்தையானது அந்த வாலிபனை உயிரோடெழும்பச் செய்தது .தபித்தாள் இறந்தபின் அங்குள்ளவர்களால் அழைத்துச்சென்ற பேதுரு தபித்தாளின் பிரேதத்தைப் பார்த்து “தபித்தாளே எழுந்திரு என்றான்” உடனே அவள் தன் கண்களைத் திறந்து பேதுருவைப் பார்த்ததை அப்போஸ்தலர் 9:40ல் பார்க்கிறோம். 

ஜனங்கள் அடைந்த ஆச்சரியம்:

லூக்கா 7 : 15, 16 “மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத் தொடங்கினான். அவனை அவன் தாயினிடத்தில் ஒப்புவித்தார். எல்லாரும் பயம் அடைந்து: மகா தீர்க்கதரிசியானவர் நமக்குள்ளே தோன்றியிருக்கிறார் என்றும், தேவன் தமது ஜனங்களைத் சந்தித்தார் என்றும் சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.”

மரித்தவன் எழுந்து உட்கார்ந்து, பேசத்தொடங்கினான். இயேசு அவனை அவன் தாயிடம் ஒப்படைத்தார்.எலியாவும், எலிசாவும் கூட மரித்தோரை எழுப்பியதால், ஜனங்கள் இயேசுவை மகா தீர்க்கதரிசி என்றனர். அதன்பின் அந்த ஊர்வலத்துக்கு அவசியமில்லாமல் போனது. அவர்கள் அனைவரும் இயேசுவின் பக்கமாய் திரும்பினார்கள். இனி அவர்கள் சுடுகாட்டை நோக் கியோ, கல்லறையை நோக்கியோ பயணம் செய்ய வேண்டியதில்லை. அந்த ஊர்வலம் இயேசுவின் ஊர்வலத்தோடு இணைந்து விட்டது. ஜீவாதிப தியான இயேசுவோடு, மரித்த வாலிபனும் சந்தோஷத்துடன் நகரத்திற்குள் பிரவேசித்தான். கிறிஸ்து நமக்குள் இருப்பாரென்றால் மரணமே உன் கூர் எங்கே,பாதாளமே உன் ஜெயம்எங்கே என்று நாம்கூறமுடியும். யவீருவின் மகள் மரணம் அடைந்த சிறிது நேரத்தில் இயேசு எழுப்பினார். (லூக்கா 8 : 49 – 56) நாயீன் ஊர் வாலிபனை அடக்கம் பண்ணக் கொண்டு செல்லப்பட்ட வேளையில் எழுப்பினார். லாசருவை இயேசு மரணமடை ந்து நான்கு நாட் களுக்குப் பின் எழுப்பினார். மரண இருளிலிருப்பவர்களுக்கு வெளிச்சத்தை உதிக்கச்செய்பவர் இயேசு. நாயினூர் விதவையின் கண்ணீரைத் துடைத்து இறந்து போன மகனை உயிரோடு எழுப்பிக் கொடுத்த இயேசு நம் ஒவ்வொ ருவருடைய கண்ணீரையும் துடைக்க வல்லவராய் இருக்கிறார். 

1கொரிந்தியர் 15 : 22 ல் “ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.” என்றுள்ளது.

அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த நம்மை உயிர்ப்பிப்பார் (எபேசியர்2:1). இதேபோல் பரலோகத்திலிருந்து ஒரு பெரிய ஊர்வலம் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையில் இறங்கி வரும். இதைத் தான் பவுல் கர்த்தர் ஆரவாரத்தோடும், பிரதான தூதனுடைய சத்தத்தோ டும், தேவ எக்காளத்தோடும் வருவார் என்று 1தெசலோனிக்கேயர் 4:16 ல் கூறுகிறார். அப்பொழுது கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் முதலாவது எழுந் திருப்பார்கள். பின்பு உயிரோடிருக்கும் நாமும் கர்த்தருக்கு எதிர் கொண்டு போவோம்(1தெசலோனிக்கேயர் 4: 17). அப்பொழுது நாம் மரித்தோரின் ஊர் வலத்திலல்ல, ஜீவாதிபதியின் ஊர்வலத்தில் கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம் என்று (பிலிப்பியர் 1:21) மகிழ்ச்சியோடு கூறிக் கொண்டு செல்வோம். ஆமென்.

Related Posts