Menu Close

ஆமோஸ் புத்தகத்தின் விளக்கம்

ஆமோஸ் புத்தகத்தின் ஆக்கியோனை பற்றி

  • தீர்க்கதரிசியான ஆமோஸ் எருசலேமிலிருந்து சுமார் பத்து மைல்கள் தெற்கில் உள்ள தெக்கோவா என்னும் சிற்றூரில் மேய்பர்களிடையே வாழ்ந்தவன். 1:1
  • ஆமோஸ் தான் தீர்க்கதரிசனம் சொல்லுகிற குடும்பத்திலிருந்து வரவில்லை என்பதையும், தன்னை ஒரு தீர்க்கதரிசியாக கருதிக்கொள்ளவில்லை என்பதையும் தனது தீர்க்கதரிசனத்தில் குறிப்பிடுகிறார்.
  • மாறாக காட்டத்தி மரங்களை வளர்ப்பதும், மந்தை மேய்ப்பதுமே தனது தொழில் என்று குறிப்பிடுகிறார். (7:14-15)
  • மக்களின் எளிமையான வாழ்க்கையோடு ஆமோஸிற்கு இருந்த தொடர்பு அவரது தீர்க்கதரிசனங்களின் மையமாக மாறியது. ஒடுக்கப்பட்டவர் குறித்தும் குரலற்றவர்கள் குறித்த அவரது இருதயத்தின் பாரம் தீர்க்கதரிசனங்களில் வெளிப்பட்டது.

வரலாற்றில் இந்தப் புத்தகத்தின் இடம்

  • இஸ்ரவேலில் இருந்த ஓசியாவோடும், யூதாவிலிருந்த ஏசாயா, மீகாவோடும் சமகாலத்தில் வாழந்தவன்.
  • ஆமோஸ் “பூமிஅதிர்ச்சி உண்டாக இரண்டு வருஷத்துக்கு முன்னே,” தீர்க்கதரிசனமுரைத்தவன் 1:1
  • இந்தப் பூமிஅதிர்ச்சி மிகப் பிரமாண்டமானதாக இருந்ததினால் இதைக்குறித்து சகரியா இது சம்பவவித்து 200 அண்டுகளுக்கு பின்பாக உசியாவின் ஆட்சிக்காலத்தில் நடந்ததாக குறிப்பிடுகிறார். (சகரியா 14:5)
  • ஆமோஸ் யூதாவாகிய தெற்கு இராஜ்யத்திலிருந்து வந்திருந்தாலும், இஸ்ரவேலாகிய வடக்கு இராஜ்யத்திற்கு எதிராகவும் சுற்றியிருந்த தேசங்களுக்கு எதிராகவும் அவரது தீர்க்கதாசனம் அமைந்திருந்தது (7:12). இதனால் சுயபெருமைகொண்டிருந்த இஸ்ரவேலர்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது.

இந்தப் புத்தகத்தின் நோக்கம்

  • ஆமோஸ் தேவனை உலகத்தை ஆளுகிறவராக காண்பித்து எல்லா தேசங்களும் அவருக்கு கணப்கொப்புவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார்.
  • எந்த அளவிற்கு தேசம் இதை அறிந்திருக்கிறதோ அந்த அளவிற்கு அதன் செயற்பாடுகளும் இருக்கவேண்டும். பொதுவாக எல்லா தீர்க்தரிசிகளும் அவர்களது தீர்க்கதரிசனங்களில் இஸ்ரவேலுக்கும், யூதாவுக்கும் மீட்பு மற்றும் மறுசீரமைப்பை குறித்தே பெரிதும் பேசியிருக்கையில் ஆமோஸ் இந்த ஆறுதல் அளிக்கும் காரியத்திற்கு இறுதி ஐந்து வசனங்களை மாத்திரமே ஒதுக்குகிறார்.
  • அதற்கு முன்பாக ஆமோஸிடம் இருந்து புறப்பட்ட கர்த்தருடைய வார்த்தை நல்ல வசதியான நிலையில் வாழ்ந்திருந்த இஸ்ரவேலின் குடிகளுக்கு எதிராகவே இருந்தது. இவர்கள் தங்கள் அயலகத்தார் குறித்து கவலையற்றவர்களும், மற்றவர்களின் நிலையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டவர்களும், தங்களைக் குறித்து மாத்திரமே கரிசனையுடையவர்களுமாயிருந்தார்கள்.
  • மற்ற எந்த வேதபுத்தகத்தை காட்டிலும் ஆமோஸின் புத்தகம் தேவனுடைய ஜனங்கள் மற்றவர்களை தவறாய் நடத்துவதை குறித்து கணக்கொப்புவிக்க வேண்டும் என்பதை வலிமையாய் எடுத்துரைக்கிறது.
  • நீதியைக் குறித்து தேவனின் எண்ணத்தை ஜனங்கள் பிரதிபலிக்க தவறியதை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டுகிறது. தேவையுள்ள ஜனங்களை விற்றுப்போட்டார்கள், நாதியற்ற ஜனங்களின் இயலாமையை தங்களுக்கு சாதகமாக்கினார்கள், ஏழைகளை ஒடுக்கினார்கள், ஆண்கள் பெண்களை ஒழுக்கக்கேடான செய்கைகளுக்கு பயன்படுத்திக் கொண்டார்கள். (2:6-8,3:10, 4:1,5:11-12,8:4–6)
  • தங்கள் பொருளாதார வெற்றியினால் மமதைகொண்டு தங்கள் வருமானத்தை பலப்படுத்திக்கொள்ள முனைந்து ஒருவருக்காக ஓருவர் கரிசனைகொள்ள வேண்டும் என்பதை மறந்தார்கள்.

இந்தப் புத்தகத்தின் முக்கிய பகுதிகள்

1. சுற்றியுள்ள தேசங்கள் மீதான தண்டனை 1:1-2:3

  1. அறிமுகம் 1:1-2
  2. கொடூரத்திற்காக சீரியாவிற்கு தண்டனை 1:3-5
  3. அடிமைகளை உருவாக்கியதற்காக பெலிஸ்தியாவிற்கு தண்டனை 1:3-5
  4. ஒப்பந்தத்தை மீறி அடிமைகளை விற்றதால் தீருவிற்கு தண்டனை 1:9-10
  5. பழிவாங்கும் ஆவியை கொண்டிருந்த ஏதோமிற்கு தண்டனை 1:11-12
  6. வன்முறை குற்றங்களுக்காக அம்மோனுக்கு தண்டனை 1:13-15
  7. அநீதியான செய்கைளுக்காக மோவாபிற்கு தண்டனை 2:1-3

2. யூதா, இஸ்ரவேல் மீதான தண்டனை 2:4-6:14

  1. நியாயப்பிரமாணத்தை அசட்டை செய்ததற்காக யூதாவிற்கு தண்டனை 2:4,5
  2. ஒழுக்கக்கேட்டுக்காகவும், தேவநிந்தனைக்காகவும் இஸ்ரவேலுக்கு தண்டனை 2:6-16
  3. இஸ்ரவேலின் எல்லா வீட்டின் மேலும் (12 கோத்திரங்கள்) மீதும் தேவன் குற்றஞ்சாட்டுகிறார். அதி 3 (நல்ல வசதியான நிலையில் இருக்கும்போது பொறுப்புக்களும் உண்டு. ஆசீர்;வாதம் பெருகும் அளவிற்கு தண்டனையும் பெருகும்)

3. எதிர்காலம் குறித்த தரிசனங்கள் அதி 7-9

  1. வெட்டுக்கிளிகளின் தரிசனம் 7:1-13
  2. அக்கினி தரிசனம் 7:4-6
  3. தூக்குநூல் தரிசனம் 7:7-9
  4. வரலாற்று இடைவேளை 7:10-17 (தீர்க்கதரிசியின் தனிப்பட்ட அனுபவம்)
  5. கோடைகால பழங்கள் குறித்த தரிசனம் அதி 8
  6. உலகமெங்கும் சிதறடித்தல் குறித்த தரிசனம் 9:1-10
  7. உலகமெங்கும் மீண்டும் சேர்த்தலும், இராஜ்யத்தின் மறுசீரமைப்பும் குறித்த தரிசனம் 9:11-15

இந்த ஆமோஸ் புத்தகத்தின் கண்ணோட்டம் / விளக்கம், ACA Avadi சபையின் போதகர் திரு. Gabriel Thomasraj அவர்களின் PDF பதிவிலிருந்து எடுக்கப்பட்டது. Pastor. Gabriel Thomasraj அவர்களுக்காக கர்த்தரை ஸ்தோத்தரிக்கிறோம்.

Related Posts