குயவன் செய்த ஒரு கலசத்தை கர்த்தர் எரேமியாவிடம் உடைத்துப் போடச் சொன்னார். அதற்குக் காரணம் அங்குள்ள மக்கள் பிற தேவர்களுக்குத் தூபங்காட்டி, பாகாலுக்கு மேடைகளைக்கட்டி, தங்கள் பிள்ளைகளை பாகாலுக்குத் தகனபலிகளாகத் தகனிக்கும்படி செய்தனர். அந்த இடத்துக்கு மூப்பர்கள் சிலரைக் கூட்டிக்கொண்டு செல்லும்படி கர்த்தர் எரேமியாவுக்குக் கூறினார். அங்கு எரேமியா வரப்போகும் அழிவைக் குறித்த தேவனது வார்த்தையை அறிவித்தான். செப்பனிடப்படக்கூடாத உடைத்துப் போட்ட கலசத்தைப்போல, எருசலேமும், யூதாவும் பேரழிவைக் கொண்டு வரும். நியாயத்தீர்ப்பில் அழிந்து போவார்கள் என்று எரேமியா விளக்குகிறான் – எரே 19:1 – 15