Menu Close

நியாயப்பிரமாணத்தின் முடிவானவர்

நியாயப்பிரமாணமென்பது தேவகட்டளை. அது பத்து கட்டளைகளையும் உள்ளடக்கிய 600க்கும் மேற்பட்ட கட்டளைகளைக் கொண்டது. தேவ பார்வையில் நன்மை, தீமையைப் பற்றி அது போதிக்கின்றது (உபாகமம் 6 :8) 

அதை மனிதர் கடைப்பிடிக்க முயன்று தோல்வியுற்றனர் (ரோமர் 3 : 20). அது பாவங்களையும் அதனுடைய முடிவையும் காட்டியது (1யோவான் 3: 4). 

பாவம் என்ன என்பதை உணர்த்தியது (ரோமர் 3 : 20). ஆனால் பாவங்கள் மன்னிக்கப்படவில்லை. மனிதனை நல்லவனாக அது மாற்றவில்லை. 

இவ்வாறு பாவத்தினால் வரும் சாபத்தின் மொத்த உருவாக மாறிய நியாயப்பிரமாணம் (கலாத்தியர் 3: 10), கதியற்ற நம்மைக் கிறிஸ்துவிடம் வழிநடத்தியது (கலாத்தியர் 3 :24). 

கிறிஸ்துவண்டை நாம் வந்தபோது, அவர் நம்மை நியாயப்பிரமாண சாபத்திலிருந்து விடுவித்தார் (கலாத்தியர் 3 :13). 

அவர் பாவத்தின் அதிகாரத்திலிருந்து விடுவித்தார் (ரோமர் 6 :14). 

அவரே நமது வாழ்வை வெற்றிகரமாக்க நம்மில் வாழ வந்துவிட்டார் (கலாத்தியர் 2 : 20, 1 கொரிந்தியர் 1: 31). 

இயேசு நியாயப்பிரமாணத்திற்கு எந்த சிறப்புமில்லாமல் போகும்படி செய்தார் (ரோமர் 4 :14). 

புதியஉடன்படிக்கையால் அதைப் பழையதும் ஒழிந்து போகிறதுமாக்கினார் (2 கொரிந்தியர் 3 : 6,8). 

நியாயப்பிரமாணத்திற்கு நம்மை மரிக்க வைத்து, அதன் அதிகாரத்திலிருந்து விடுதலையாக்கினார் (ரோமர் 7 : 2, 6). 

நியாயப்பிரமாணத்தை இயேசு தனது மாம்சத்தினால் ஒழித்தார் (எபேசியர் 2:15).

Related Posts