தாவீதுக்குள் சாத்தானின் ஏவுதல்:
தாவீது அநேக சாதனைகளையும், போர் வெற்றிகளையும் பெற்றபின், அவ னைச் சோதிக்கும்படி சாத்தானுக்குத் தேவன் அனுமதித்தார் (2 சாமுவேல் 24 : 1). சாத்தான் எப்போதுமே ஒரு விசுவாசி தேவனுடைய சித்தத்திற்கு, நீதியான வழிகளுக்கும் தன்னை அர்ப்பணிக்க விரும்பும்போது தீவிரமாக எதிர்ப்பான். இதைத்தான் பவுல்,
எபேசியர் 6 : 11, 12 “நீங்கள் பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, தேவனுடைய சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள். ஏனெனில், மாம்சத்தோடும் இரத்தத்தோடுமல்ல, துரைத்தனங்களோடும், அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு.” என்றும் பேதுரு,
1பேதுரு 5 : 8 ல் “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.
என்றும் கூறியிருப்பதைப் பார்க்கிறோம். சாத்தான் மனிதனுடைய உள்ளத்தில் தன்னுடைய செயல்பாடுகளை வஞ்சகமாக நுழைத்து விடுவான். இதேபோல் தான் ஏதேன் தோட்டத்தில் சர்ப்பமானது வஞ்சித்து ஏவாளுக்குள் புகுந்து தேவ னுடைய வார்த்தையை மீறச் செய்ததைப் பார்க்கிறோம் (ஆதியாகமம் 3 : 1 – 7). .தாவீது தன்னுடைய ஆட்சியின் பல சாதனைகளையும், போர்களில் வெற்றி களையும் பெற்று அவற்றின் மூலம் வெற்றிப் பெருமிதம் கொண்டிருந்த வேளை யில்தான் சாத்தான் புகுந்தான். சாத்தான் தாவீது மக்கள்தொகை கணக்கெடுப் பைத் தேவன் ஆமோதிப்பார் என்று நினைக்கச் செய்தான்.இஸ்ரவேல் இராஜ் ஜியத்தில் தேவன் தம்முடைய நோக்கங்களை நிறைவேற்றத் தாவீதை பயன் படுத்தியதால், தாவீது பெருமை கொண்டான் இதன்முலம் தன்னையும், தன் தேசத்தையும் உயர்த்தித் தன் தேசத்தின் பலத்தைச் சார்ந்திருக்க விரும்பி னான். அதனால் தேவனுக்கு விரோதமாகப் பாவஞ்செய்தான்.
கர்த்தர் அனுப்பிய காத் தீர்க்கதரிசி கூறியது:
இந்தக்காரியம் தேவனுடைய பார்வைக்கு ஆகாததால் கர்த்தர் இஸ்ரவேலை வாதித்தார். தாவீது உண்மையிலேயே மனம் வருந்தி மனஸ்தாபப்பட்டு, தன்னு டைய பாவத்தை அறிக்கையிட்டான் (1நாளாகாமம் 21:7,8,2 சாமுவேல் 24:10). கர்த்தர் ஞானதிருஷ்டிக்காரனாகிய காத்துடனே பேசி மூன்று காரியங்களைக் கூறி அதில் ஒன்றை தெரிந்து கொள்ளச் சொன்னார்.1.தேசத்தில் மூன்று வருட பஞ்சம். 2.சத்துருக்களுக்கு முன்பாகச் செய்யும் மூன்றுமாத சங்காரம். 3. மூன்று நாள் கர்த்தருடைய தூதன் இஸ்ரவேலுடைய எல்லையெங்கும் சங்காரம் உண் டாக்கும் கொள்ளை நோய் என்றார். தாவீதையே தன் சொந்தத் தண்டனையை தெரிந்தெடுக்கச் சொல்கிறார். தாவீது தோல்வி கண்டார். பாவம் செய்தார். ஆனால் அவரிடம் ஒருக்காலும் அழியாத விசுவாசம் இருந்தது. தாவீது மூன்று நாள் கொள்ளைநோயைத் தெரிந்தெடுத்தார். தாவீது கர்த்தரை அறிந்திருந்தான். மனிதனின் மேல் நம்பிக்கை வைத்து தாவீது கணக்கெடுப்பதற்குக் கட்டளை கொடுத்தான்.தான் ஒரு பெரிய தவறு செய்து விட்டதை அப்பொழுது உணர்ந் தான். நான் மனுஷருடைய கரத்திலல்ல, தேவனுடைய கரத்தில் விழுவேன் என்று விழுந்தான். ஏனென்றால் தேவன் மகா இரக்கமுள்ளவர் என்பதை அறிந் திருந்தான். நம்முடைய பாவங்களுக்குத் தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறவர் தேவன் ஒருவரே.
கர்த்தர் கொடுத்த தண்டனையும் அழிவும்:
கர்த்தர் கொள்ளை நோயை அனுப்பியதால் எழுபதினாயிரம்பேர் செத்தார்கள். அடுத்து எருசலேமை அழிக்கத் தேவன் ஒரு தூதனை அனுப்பினார். ஆனாலும் அவன் அழிக்கையில் கர்த்தர் அந்தத் தீங்குக்கு மனஸ்தாபப்பட்டு நிறுத்தக் கட்டளையிட்டார். அப்போது தூதன் எபூசியனாகிய ஓர்னானின் களத்தண்டை யில் நின்றான் (1 நாளாகாமம் 21 : 9 _ 15). தாவீது தன்னுடைய பாவத்தை அறிக் கையிட்டு பின்னரும், தேவன் உலகப்பிரகாரமான தண்டனையை அவன் மீதும், தன்னுடைய மக்கள் மீதும் வரவிட்டார். இதைத்தான் பவுல் 1 கொரிந்தியர் 10 : 11 ல் உலகத்தின் முடிவு காலத்திலுள்ள நமக்கு எச்சரிப்புண்டாகும்படி எழுதப் பட்டுமிருக்கிறது. முதன்முறையாகத் தேவன் ராஜாவாகும்படி தாவீதைக் கர்த் தர் அழைத்தபோது தேவனுடைய இருதயத்துக்கு பிரியமானவனாயிருந்தான் (1சாமுவேல் 13 :14, அப்போஸ்தலர் 13 : 22). பாவஞ் செய்தவன் மன்னிப்பைப் பெறுவதற்காகத் தேவனிடம் வரவேண்டும். தேவனுடைய கிருபையையும், இரக் கத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் (சங்கீதம் 51, எபிரேயர் 4 : 16, 7 : 25). அதே வேளையில் மனக்கசப்போ, வெறுப்போ இல்லாமல் தேவனளிக்கும் தண்டனை யையும் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருக்க வேண்டும்.
தாவீது செய்ததும் கர்த்தரின் அக்கினிமயமான பதிலும்:
காத் தீர்க்கதரிசி எபூசியனாகிய ஓர்னானின் களத்திலே ஒரு பலிபீடத்தை உண் டாக்கு என்றான்.
1 நாளாகாமம் 21 : 26 “தாவீது அந்த நிலத்திற்கு அறுநூறு சேக்கல் நிறைபொன்னை ஒர்னானுக்குக்குக் கொடுத்து, அங்கே கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டி, சர்வாங்க தகனபலிகளையும் சமாதான பலிகளையும் செலுத்தி, கர்த்தரை நோக்கி விண்ணப்பம்பண்ணினான்; அப்பொழுது அவர் வானத்திலிருந்து சர்வாங்க தகனபலிபீடத்தின்மேல் இறங்கின அக்கினியில் அவனுக்கு மறுஉத்தரவு கொடுத்ததுமல்லாமல்,”
தாவீது கர்த்தரின் வார்த்தையின்படியே ஓர்னானிடம் சென்று, அந்த நிலத்தை அவனிடம் விலைக்குக் கேட்டான் (1 நாளாகமம் 21:18,19). அவனோ அதை அவனு க்கு இலவசமாகவே கொடுக்கப் பிரியப்பட்டான். தாவீது அதற்கு ஒத்துக் கொள் ளாமல் 600 சேக்கல் நிறை பொன்னை ஓர்னானுக்குக் கொடுத்து அவனுடைய நிலத்தை கிரயத்துக்குக் கொண்டான். அங்கே ஒரு பலிபீடத்தைக் கட்டி சர்வா ங்க தகனபலிகளையும், சமாதானப் பலிகளையும் செலுத்தி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணினான்.கர்த்தர் பதில் கொடுக்கும் விதமாக வானத்திலிருந்து அக்கினியை அனுப்பி தகன பலிபீடத்தின் மேல் இறங்கச் செய்தார். மேலும் தேவ தூதனின் பட்டயத்தைத் திருப்பக் கட்டளையிட்டார் (1 நாளாகாமம் 21 : 25 – 27). கிறிஸ்துவின் இராஜ்ஜியத்திற்கான நீதியினிமித்தமும், கொள்கையினி மித்தமும், துன்பங்களை அனுபவிக்க ஆயத்தமாயிருப்பது தேவனுக்குப் பிரிய மானது (மத்தேயு 8 : 10 – 12, மாற்கு 8 : 34, 10 : 21 – 27). நாம் நம்மைப் பூரணமாக தாழ்த்தி கர்த்தர் மேலே நம்முடைய விசுவாசத்தை வைப்போம். ஆமென்.