2 இராஜாக்கள் 13 : 20, 21 “எலிசா மரணமடைந்தான்; அவனை அடக்கம்பண்ணினார்கள்; மறுவருஷத்திலே மோவாபியரின் தண்டுகள் தேசத்திலே வந்தது.”
அப்பொழுது அவர்கள், ஒரு மனுஷனை அடக்கம்பண்ணப்போகையில், அந்தத் தண்டைக் கண்டு, அந்த மனுஷனை எலிசாவின் கல்லறையில் போட்டார்கள்; அந்த மனுஷனின் பிரேதம் அதிலே விழுந்து எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டபோது, அந்த மனுஷன் உயிரடைந்து தன் கால்களை ஊன்றி எழுந்திருந்தான்.”
எலிசா மரணமடைந்து அடக்கம் பண்ணப்பட்டான். ஆனால் கல்லறையில் வைக்கப்பட்டபின்பும் எலிசா ஒரு ஜீவன் தரும் தீர்க்கதரிசி என்று வெளிப்படுத்தப்படும்படி எல்லோருக்கும் சாட்சியாக இந்த அற்புதம் நிகழ்ந்தது( 2இராஜாக்கள் 4 : 32 – 37, 1 இராஜாக்கள் 17 : 17 – 24). இந்த அற்புதம் ஒரு தேவ மனுஷனுடைய வல்லமை அவனுடைய மரணத்துடன் நின்று விடுவதில்லை. ஆனால் அதன் பின்னரும் ஆவிக்குரிய ஜீவன் தரும் வாழ்க்கையாக அது காணப்படும் என்பதை விளக்குகிறது (யோவான் 12 : 24, 2 கொரிந்தியர் 4 : 11, 12). இறந்த பின்னும் அற்புதத்தைச் செய்த ஒரே மனிதன் எலிசா மட்டுமே. மரித்தோரை எழுப்பின எலிசா வியாதியில் மரித்தான். இதனால் எலிசா செய்த அற்புதங்கள் அனைத்தும் எலிசாவால் நடக்கவில்லை. கர்த்தரால் நடந்ததென்றறிகிறோம். பவுல் எத்தனையோ அற்புதங்கள் செய்தார். அவனுடைய உருமாக்களைத் தொட்டவர்கள் கூட சுகம் பெற்றனர் ஆனால் பவுலினுடைய சரீரத்திலிருந்து வியாதிக்காக மூன்றுமுறை தேவனை நோக்கி ஜெபித்தும் “என்கிருபை உனக்குப் போதுமென்று” கூறியதைப் பார்க்கிறோம். எலிசா அடக்கம் பண்ணப்பட்ட மறு வருஷத்திலே மோவாபியர்கள் இஸ்ரவேலர்களை எதிர்க்க வருகிறார்கள்.
அந்த நேரத்தில் ஒரு மனுஷனை அடக்கம் பண்ணைக் கொண்டு வருகிறார்கள். அவர்கள் மோவாபியர்களின் சேனை வருவதைப் பார்த்து பயத்தில் அந்தப் பிரேதத்தை அடக்கம் பண்ணாமல் எலிசாவின் கல்லறையின் மேல் போட்டனர். அந்தப் பிரேதம் எலிசாவின் எலும்புகளின்மேல் பட்டு அந்தப் பிரேதமானது உயிரடைந்தது காலூன்றி நின்றது. நம்முடைய ஊழியத்தின் பயன் நமது வாழ்க்கைக்குப் பின்னரும் இருக்க முடியும். அபிஷேகம் பண்ணப்பட்டு, வரங்களை பெற்ற ஒரு மனிதனின் இறந்துபோன சரீரத்திற்கு இப்படிப்பட்ட வல்லமை இருக்குமானால், நமக்காக உயிர்த்தெழுந்த இயேசுவின் வார்த்தை எத்தனை வல்லமையுள்ளது. மரித்துக் போயிருக்கிற நமது வாழ்க்கைத் திரும்பத் துளிர்க்க, நம்முடைய குடும்பம் கர்த்தருக்காக எழும்பிப் பிரகாசிக்க, பொருளாதாரச் சீர்கேடுகள் சரியாக, மரணத்தை ஜெயித்த தேவனிடம் நம்மை ஒப்புக்கொடுத்து தேவபயத்தோடும், நடுக்கத்தோடும் அவரைப் பின்பற்றுவோம். எனவே கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களாக வாழ்ந்து நற்பணி செய்ய முற்படுவோம். மரித்தவனின் எலும்புகள் மூலமாக அற்புதம் செய்யும் கர்த்தர் உயிருள்ள நம் மூலமும் அற்புதம் செய்வார். ஆமென்.