Menu Close

வேதத்தில் பொருளாசையால் கட்டுண்டவர்கள்

1. ஆகான் ஒரு பாபிலோனிய சால்வையும், இருநூறு சேக்கல் வெள்ளியையும், ஐம்பது சேக்கல் பொன்பாளத்தையும் இச்சித்து கர்த்தருடைய வார்த்தைக்கு விரோதமாக எடுத்துக் கொண்டான் – யோசு 7:21
2. யூதர்கள் நீதிமானை பணத்துக்கும், எளியவனை ஒரு ஜோடு பாதரட்சைக்கும் விற்றுப்போட்டதாக ஆமோஸ் கூறுகிறான் – ஆமோ 2:6
3. தீருமக்கள் தனக்கு அரண்மனைகளைக் கட்டி வெள்ளியையும், பசும்பொன்னையும் சேர்த்து வைத்தனர் என்று சகரியா கூறுகிறான் – சக 9:3
4. யூதாஸ்கோரியாத்து முப்பது வெள்ளிக்காசுக்குக் ஆசைப்பட்டு இயேசுவைக் காட்டிக் கொடுத்தான் – மத் 26:15
5. பெலிக்ஸ் தேசாதிபதி பவுலை விடுதலை பண்ண தனக்குப் பணம் கொடுப்பானென்று நம்பியிருந்தான் – அப் 24:26
6. பிலேயாம் கர்த்தருக்கு விரோதமாக அநீதத்தின் கூலியை விரும்பி கர்த்தரால் கடிந்து கொள்ளப்பட்டான் – 2பேது 2:15, 16

Related Posts