1. யாகேல் தன் வீட்டுக்கு வந்த சிசெராவைச் சதி செய்து கொன்றாள் – நியா 4:18 – 21
2. யெசபேல் நாபோத்துக்கு விரோதமாகச் சதிசெய்து சாட்சி சொல்ல வைத்து கொல்ல வைத்தாள் – 1இரா 21:2, 8 – 10
3. தாவீது உரியாவின் மனைவி பத்சேபாளின் மேல் ஆசை கொண்டு சதி செய்து போர்க்களத்தில் கொல்ல வைத்தான் – 2சாமு 11:14 – 27
4. யோரோம் தன் இரதத்தை திருப்பிக் கொண்டு பொய் அகசியாவை நோக்கி “அகசியாவே இது சதி என்றான்.” – 2இரா 9:23
5. ஏகூத் சதி செய்து மோவாபின் ராஜாவைக் கத்தியால் குத்திக் கொன்றான் – நியா 3:15 – 21
6. ஏரோதியாள் சதிசெய்து யோவான்ஸ்நானகனை தன் மகளின் மூலமாகக் கொல்ல வைத்தாள் – மாற் 6:17 – 25
7. யோவாப் சதியினால் அமாசாவை முத்தஞ் செய்து குத்திக் கொலை செய்தான் – 2சாமு 20: 9, 10