1. காலேப்: யோசுவாவிடம் மலைநாட்டை கேட்டு வாங்கி எதிரிகளைத் துரத்துவேன் என்றார் – யோசு 14:12
2. யோனத்தான்: தைரியமாக எதிரிகளை தாணையத்துக்குள் சென்றான் – 1சாமு 14:6
3. தாவீது: பெலிஸ்தியனான கோலியாத்தை தைரியமாகச் சென்று யுத்தம் பண்ணுவேன் என்றான் – 1சாமு 17:32
4. நெகேமியா: எருசலேமின் அலங்கத்தை தைரியமாக அங்கு சென்று கட்டினான் – நெகே 6:11
5. பாபிலோனிலுள்ள தானியேலின் நண்பர்கள்: சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோ ஆகிய மூன்று பெரும் தைரியமாக தேவன் நம்மைத் தப்புவிப்பார் என்ற எண்ணத்தோடு அக்கினிச் சூளையில் இறங்கினர் – தானி 3:16, 17
6. தானியேல்: ராஜாவைத்தவிர யாரை வணங்கினாலும் சிங்கக்கெபிக்குள் போடுவார்கள் என்று தெரிந்த பின்பும் மூன்று வேளையும் கர்த்தரை ஆராதித்து சிங்கக்கெபிக்குள் சென்று தேவனால் சிங்கம் சேதப்படுத்தாமல் வெளியே வந்தான் – தானி 6:10
7. கிறிஸ்து: கிறிஸ்து சிலுவையிலறைய ஒப்புக்கொடுத்தவுடன் பிலாத்து இயேசுவை நோக்கி “விடுதலை பண்ண எனக்கு அதிகாரம் உண்டென்று உனக்குத் தெரியாதா” என்றான். ஆனால் இயேசுவோ அஞ்சாநெஞ்சுடன் “பரத்திலிருந்து உனக்குக் கொடுக்கப்படாதிருந்தால், என்மேல் உனக்கு ஒரு அதிகாரமும் இராது என்றார்.” – யோ 19:10, 11
8. பேதுரு, யோவான்: எருசலேமில் இருவரும் தைரியமாக இயேசுவைப் பற்றி பிரசங்கித்தனர் – அப் 4:13
9. அப்போஸ்தலர்கள்: அப்போஸ்தலர்கள் தேவவசனத்தைத் தைரியமாகப் பிரசங்கித்தனர் – அப் 4:31
10. பவுல்: பவுல் தைரியமாக இயேசுவைப் பற்றி பிரசங்கம் பண்ணி கிரேக்கர்களுடன் தர்க்கித்தான் – அப் 9:29
11. பவுலும், பர்னபாவும்: இருவரும் அகோனியா பட்டணத்தில் தேவவசனத்தை தைரியமாகப் பிரசங்கித்தனர் – அப் 14:3
12. அரிமத்தியா யோசேப்பு: தைரியமாகப் பிலாத்துவினிடத்தில் போய் இயேசுவின் சரீரத்தைக் கேட்டு வாங்கினான் – மாற் 15:43