மோசேயின் பஸ்கா நமக்கு முன்னடையாளமாயிருக்கிறது.
1 கொரி 5:7 “நம்முடைய பஸ்காவாகிய கிறிஸ்து நமக்காகப் பலியிடப்பட்டிருக்கிறாரே.”
இந்த பண்டிகைக்கு முக்கியமானது ஆட்டுக்குட்டி. இயேசுவும் உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்க்கும் ஆட்டுக்குட்டியாக வந்தார். புளிப்பில்லாத அப்பத்துக்கு பவுல் என்ன கூறுகிறாறென்றால்
1 கொ 5:8 “பழைய புளித்தமாவோடே அல்ல, துர்குணம் பொல்லாப்பு என்னும் புளிபில்லாத அப்பத்தோடே பண்டிகையை ஆசரிக்கக் கடவோம்.”
புளிப்பு பிரிவைக் குறிக்கிறது. இன்னும் வேறு அடையாளங்கள் யாதெனில்:
அ) பஸ்கா பாவத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாவதைக் குறிக்கிறது. இயேசுவின் இரத்தத்தில் வைக்கும் விசுவாசத்தின் நிமித்தம் பாவத்தின் சம்பளமாகிய மரணத்திலிருந்து தப்புவித்துக் கொள்ளுகிறோம்.
ஆ) இரத்தம் கதவு நிலையில் தெளித்தல் நம்முடைய விசுவாசத்தின் அறிக்கையைக் குறிக்கிறது. பஸ்காவைச் சாப்பிடுவதைப் போல நாமும் இயேசுவோடு ஐக்கியப்பட்டிருந்தால் தான் ஜீவனைப் பெறமுடியும்.