▪ நீதி 18:22 “மனைவியைக் கண்டடைகிறவன் நன்மையானதைக் கண்டடைகிறான்; கர்த்தரால் தயையும் பெற்றுக்கொள்ளுகிறான்.”
▪ நீதி 19:14 “புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.”
▪ நீதி 12:4 “குணசாலியான ஸ்திரீ தன் புருஷனுக்குக் கிரீடமாயிருக்கிறாள்; இலச்சை உண்டுபண்ணுகிறவளோ அவனுக்கு எலும்புருக்கியாயிருக்கிறாள்.”
▪ நீதி 5:18 “உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு.”
▪ நீதி 5:19 “உன் இள வயதின் மனைவியே நேசிக்கப்படத்தக்க பெண்மானும், அழகான வரையோடும் போலிருப்பாளாக; அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னை திருப்திசெய்வதாக; அவளுடைய நேசத்தால் நீ எப்பொழுதும் மயங்கியிருப்பாயாக.”
▪ நீதி 19:13 “மனைவியின் சண்டைகள் ஓயாத ஒழுக்கு.”
▪ நீதி 6:29 “பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும், ஆக்கினைக்குத் தப்பான்.”