இப்பொழுது நடக்கிற கிருபையின் காலம் முடிந்து இனி வரவிருப்பது தேவஆளுகையின் காலம். அது இயேசுவின் இரண்டாம் வருகைக்குப்பின் நடைபெறவிருக்கிறது. இயேசுவின் வருகை, ஆயிரம் வருட அரசாட்சி இவைகளைக் குறித்து வேதம் தெளிவாகக் கூறுகிறது. சபை அதிசீக்கிரமாய் இயேசுவோடு சேர்த்துக் கொள்ளப்படும். இயேசு தம் பரிசுத்தவான்களோடு கூட பூமியில் ஆளுகை செய்வார். இக்காலத்தில் புதிய வானமும், புதிய பூமியும் உண்டாவதோடு முடிவடைந்து விடும்.