Menu Close

தீர்க்கதரிசிகள் இருக்க வேண்டிய விதமும் அதற்கு சான்றுகளும்

1. தேவனோடு நடக்கிறவர்களாக இருக்க வேண்டும்: ஏனோக் தேவனோடு நடந்தவன். அவனுடைய தீர்க்கதரிசனத்தை – யூதா 14, 15 ல் காணலாம்.
2. பரிசுத்தமுள்ளவர்களாக இருக்க வேண்டும்: மோசேயிடம் தூதன் பாதரட்சைகளைக் கழற்றி விட்டு வா என்றான் – யாத் 3:5
ஏசாயாவை பரிசுத்தமாக்க அக்கினிக் குறட்டினால் தொட்டார் – ஏசா 6:5, 7
3. பாரமுள்ளவனாக இருக்க வேண்டும்: எலிசா ஆகேலுடைய பாரத்தைப் பார்த்து அழுததை 2இரா 8:11 ல் பார்க்கிறோம்.
4. இரகசியங்களை அறிவிப்பவனாக இருக்க வேண்டும்: நேபுகாத்நேச்சாரின் இரகசியங்களை தானியேலுக்குத் தேவன் தெரிவித்தார் – தானி 2.
5. எச்சரிக்கிறவனாக இருக்க வேண்டும்: அனனியா சப்பீராளுடைய பொய்யையும், தந்திரத்தையும் பேதுரு தைரியமாகக் கண்டித்தார் – அப் 5:1 – 9
ஆகாப் ராஜாவைப் பார்த்து எலியா பாகால்களைப் பின்பற்றி நீயும், உன் வீட்டாரும் இஸ்ரவேலைக் கலங்கப் பண்ணுகிறீர்கள் என்றார் – 1இரா 18:18

Related Posts