1. தாவீதுக்கு ஒப்படைத்த இருதயம் இருந்தது – 1சாமு 16:7
2. தாவீது எதற்கும் ஆண்டவருடைய முகத்தையே நாடினான் – 1நாளா 16 10, 11
3. தாவீதிடம் தேவனுக்குரிய கனம், மகிமை ஆகியவற்றைக் குறித்த வைராக்கியமும், ஆழ்ந்த கரிசனையுமிருந்தது – 1சாமு 17:26, 36, 46
4. தாவீது “கோலியாத் இஸ்ரவேலின் சேனையை நிந்திக்கவில்லை, இஸ்ரவேலின் தேவனை நிந்தித்தான்” என்று உணர்ந்தான் – 1சாமு 17:45
5. தாவீதின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்களின் போது, தேவன் கொடுத்த விடுதலை அவனுக்கு நினைவுக்கு வந்ததால், தேவ வல்லமையின் மீது அவனுக்கிருந்த நம்பிக்கை வலுவடைந்து கோலியாத்தை எதிர்த்தான் – 1சாமு 17:34 – 37
6. பெலிஸ்தியரின் மேலும், கோலியாத்தின் மேலும் வெற்றி கொள்ள தாவீது தன்னில் நம்பிக்கை கொள்ளாது தேவன் மேலேயே நம்பிக்கை வைத்திருந்தான் – 1சாமு 17:37, 45 – 47
7. கர்த்தருடைய ஆவி தாவீதின் மேலிறங்கி அவனை எதிர்க்கும் வல்லமையைக் கொடுத்தது – 1சாமு 16:13