1. கர்த்தர் ஏதேன் தோட்டத்தை உருவாக்கி அதில் பார்வைக்கு அழகும், புசிப்புக்கு நலமுமான சகலவித விருட்சங்களை வைத்தார்.
2. தோட்டத்தின் நடுவே ஜீவவிருட்சத்தை முளைக்கப் பண்ணினார்.
3. நன்மை, தீமை அறியத்தக்க விருட்சத்தையும் பூமியிலிருந்து முளைக்கப் பண்ணினார்.
4. தோட்டத்துக்குத் தண்ணீர் பாயும்படி ஏதேனிலிருந்து ஒரு நதியை ஓடிவரச் செய்தார்.
5. அதிலிருந்து நாலு பெரிய ஆறுகளைப் பிரியும்படி செய்தார்.
6. முதலாம் ஆற்றுக்கு பைசோன் என்று பெயர். அது ஆலிலா தேசம் முழுவதையும் சுற்றி வரும்படி செய்தார். அவ்விடத்திலே பொன் விளையும். அங்கு பிதாலோகும், கோமேதகக் கல்லும் உண்டு.
7. இரண்டாம் ஆற்றுக்கு கீகோன் என்று பெயர். அது எத்தியோப்பியா தேசம் முழுவதையும் சுற்றி ஓடும்.
8. மூன்றாம் ஆற்றுக்கு இதெக்கேல் என்று பெயர். அது அசிரியாவுக்கு கிழக்கே ஓடும்.
9. நாலாம் ஆற்றுக்கு ஐப்பிராத்து என்று பெயர்.
10. தாம் உருவாக்கின மனுஷனை அதில் வைத்தார் – ஆதி 2:9 – 15