Menu Close

இயேசு “நான் யார்” எனக் கூறியது

“ஜீவ அப்பம் நானே” (யோ 6 : 35)

“நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன்.” (யோ 8 : 12)

“நானே ஆடுகளுக்கு வாசல்.” (யோ 10 : 7)

“நானே நல்ல மேய்ப்பன்.” (யோ 10 : 11)

“நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன்.” (யோ 11 : 25)

“நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாயிருக்கிறேன்.” (யோ 14 : 6)

“நானே மெய்யான திராட்சைச் செடி.” (யோ 15 : 1)

“நான் அல்பாவும், ஒமேகாவும், ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்.” (வெளி 1 : 8)

“நான் முந்தினவரும் பிந்தினவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்.” (வெளி 1: 17)

“நான் மரணத்திற்கும் பாதாளத்திற்குமுரிய திறவுகோல்களை உடையவராயிருக்கிறேன்.” (வெளி 1 : 18)

“நான் தாவீதின் வேரும் சந்ததியும், பிரகாசமுள்ள விடிவெள்ளி நட்சத்திரமுமாயிருக்கிறேன்.” (வெளி 22 : 16)

“நான் என் பிதாவினிடத்தில் அதிகாரம் பெற்றதுபோல, ஜாதிகளின்மேல் அதிகாரம் கொடுப்பேன்.” (வெளி 2 : 26)

“நான் ஜெயங்கொண்டு என் பிதாவினுடைய சிங்காசனத்திலே அவரோடேகூட உட்கார்ந்ததுபோல, ஜெயங்கொள்ளுகிறவனெவனோ அவனும் என்னுடைய சிங்காசனத்தில் என்னோடே கூட உட்காரும்படிக்கு அருள்செய்வேன்.” (வெளி 3 : 21)

“நானே மேசியா” (யோ 4 : 25, 26)

Related Posts