Menu Close

ஆபிரகாம் கண்களை ஏறெடுத்த இடங்கள்

1. ஆபிரகாமும் லோத்தும் பிரிய நினைக்கும் போது லோத்து ஒரே ஒரு திசையை நோக்கிப் பார்த்தார். அது தான் அழிவின் பட்டணமாகிய சோதோம் கொமோரா. ஆனால் ஆபிரகாமோ நான்கு திசைகளையும் நோக்கிப் பார்த்து எல்லா இடங்களையும் சுதந்தரமாகப் பெற்றுக் கொண்டான் – ஆதி 13:14,15

2. ஆபிரகாம் கண்களை ஏறெடுத்த போது மூன்று புருஷர்கள் அவருக்கெதிரே நின்றார்கள். ஆபிரகாம் அவர்களைப் பார்த்து அவர்களை விட்டு கடந்து போகவேண்டாம் என்று வருந்திக் கேட்டுக் கொண்டார். அந்த சந்திப்பு ஆபிரகாமின் வாழ்க்கையை மாற்றி பெரிய ஆசீர்வாதங்களைக் கொண்டு வந்தது – ஆதி 18:2

3. ஆபிரகாம் தன் மகனைப் பலி செலுத்தச் சென்ற போது தன் கண்களை ஏறெடுத்து மோரியா தேசத்திலுள்ள மலையைப் பார்த்தான் – ஆதி 22:4

4. ஆபிரகாம் தேவ கட்டளைப்படி தன் மகனைப் பலியிட கையை ஓங்கின போது தேவன் தடுத்தார். அப்பொழுது தன் கண்களை ஏறெடுத்து புதரில் சிக்கிக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியைக் கண்டார். அதை ஆபிரகாம் தன் மகனுக்குப் பதிலாக தகனபலியிட்டார் – ஆதி 22:13

Related Posts