காலங்கள் தாண்டியும் தனக்கு பிள்ளை கிடைக்காததால், சாராள் ஆபிரகாமுக்கு ஆகாரை மனைவியாகக் கொடுத்தாள். அவள் கர்ப்பவதியாகி நாச்சியாரை அற்பமாக எண்ணினாள். அதனால் சாராய் ஆகாரை கடினமாக நடத்தினாள். உடனே ஆகார் சாராயை விட்டு சூர் வனாந்தரத்திற்கு ஓடிப்போனாள். கர்த்தருடைய தூதன் ஆகாருக்கு எதிர்ப்பட்டு “நீ போய் சாராளுக்கு அடங்கி இரு.” என்று கூறினார். அப்போது ஆகார் தன்னோடு பேசின கர்த்தருக்கு “நீர் என்னைக் காண்கிற தேவன்.” என்று பெயரிட்டாள் – ஆதி 16:1-13