Menu Close

சிலை வழிபாடு

படங்களுக்குமுன்பாக மெழுகுவர்த்தி கொளுத்துவது, சிலைகள், படங்களுக்கு மாலையிடுவது, பூச்சூட்டுவது, பத்தி கொளுத்துவது, பொட்டுவைப்பது, தேங்காய் உடைப்பது, ஆகாரம் படைப்பது, பலியிடுவது, சூடன் கொளுத்துவது, தூபவர்க்கம் காண்பிப்பது, சிலைகளுக்கு முன்பாகக் குனிவது, முழங்கால்படியிடுவது, அவற்றைத் தொட்டு முத்தமிடுவது, கைகூப்புவது போன்றவை தவறுதலாகும் – அப் 15:28, 1கொரி 10:19 – 22, வெளி 2:20 வாகனங்கள், தொழில் செய்யும் இடத்திலிலுள்ள பொருட்களுக்கு பொட்டு வைத்து வணங்குதல், முட்டை உடைத்தல், எலுமிச்சைபழத்தை நசுக்குதல், பூசனிக்காய் உடைத்தல் போன்றவையும் விக்கிரக ஆராதனைகள். ஆயுதபூஜைக்கும், பிற சடங்குகளுக்கு பணம் தருவதும் கிறிஸ்தவர்கள் செய்யத் தகாததாகும். தேரிழுத்தல், சப்பரம் சுமத்தல் போன்றவையும் வேதத்தில் கூறப்படாத வழக்கங்களாகும். இது தவிர வாழ்க்கையில் கர்த்தருக்குக் கொடுக்கவேண்டிய இடத்தை வேறு எதற்காகிலும் அல்லது யாருக்காகிலும் கொடுத்தால் அது சிலைவழிபாட்டிற்கு சமமாகும். ஒருவன் தன் மனைவியையோ, தொழிலையோ தேவனைவிட அதிகமாக நேசித்தால் சிலை வழிபாடாகும். செய்யும் தொழிலே தெய்வமல்ல கர்த்தரே தெய்வம்.

Related Posts