Menu Close

5 எமோரிய ராஜாக்களை யோசுவா வென்றதும், சூரியனையும், சந்திரனையும் நிற்க வைத்ததும்

யோசுவாவின் வெற்றிகளையும், கிபியோனியர் இஸ்ரவேலரோடு உடன்படிக்கை பண்ணினதையும் எருசலேமின் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டு பயந்தான். அவன் எபிரோன், யார்முத், லாக்கீஸ், எக்லோன் தேசங்களின் ராஜாக்களோடு சேர்ந்து கொண்டு பலத்த சேனையோடு கிபியோனில் பாளையம் இறங்கினான். கிபியோனியர் யோசுவாவிடம் உதவி வேண்டினார்கள். யோசுவா சேனையோடு கிபியோனுக்கு விரைந்தான். ஐந்து எமோரிய ராஜாக்களும் முறியடிக்கப்பட்டனர். கல்மழையால் அனேக எமோரியர்கள் மடிந்தார்கள். இஸ்ரவேலர்கள் அவர்களைத் துரத்தி வெட்டினார்கள். யோசுவா கர்த்தரை நோக்கிப் பேசி, சூரியனை கிபியோன் மேலும் சந்திரனை ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும் தரித்து நிற்க கட்டளையிட்டான் – யோசு 10:1-27

Related Posts