1. நாத்தான் தீர்க்கதரிசி தாவீது பத்சேபாளை மனைவியாக்கியது கர்த்தருக்குப் பிடிக்காத காரியம். உரியாவைக் கொன்றது தவறானது என கண்டித்து உணர்த்தி பட்டயம் உன் வீட்டைவிட்டு என்றைக்கும் விலகாதிருக்கும் என்றார் – 2சாமு 12:9, 10
2. எலியா, ஆகாப் ராஜா நாபோத்தின் திராட்சைத் தோட்டத்தை அபகரித்ததைக் கண்டித்து உன் சந்ததியைக் கர்த்தர் அழித்துப் போடுவார் என்றார் – 1இரா 21:19, 21
3. ஆகாபிடம் மிகாயா தீர்க்கதரிசி ராமோத்துக்கு யுத்தத்துக்குப் போகவேண்டாமென்று கண்டித்து உணர்த்தினார். ஆகாப் கேட்காமல் போய் கொலையுண்டான் – 1இரா 22 அதி
4. தானியேல், பெல்ஷாத்சாரிடம் தேவாலயத்திலிருந்து எடுத்து வந்த பொற்பாத்திரங்களை உபயோகப்படுத்தியது தவறு என்று கண்டித்து உணர்த்தினார். அன்று இரவே ராஜா கொலையுண்டான் – தானி 5 ம்அதி
5. யோவான்ஸ்னானகன், ஏரோது ராஜா அவனுடைய சகோதரரின் மனைவியை வைத்திருப்பது தவறு என்று கண்டித்து உணர்த்தினார். முடிவு ஏரோது புழுபுழுத்து இறந்தான் – மத் 14:1 – 11
6. பேதுருவும், யோவானும், இயேசுவின் நாமத்தைக்குறித்துப் பேசவும், போதிக்கவும் வேண்டாமென்று தடை பண்ணின ஆலோசனை சங்கத்தாரிடம் “தேவனுக்குச் செவி கொடுக்கிறதைப் பார்க்கிலும் உங்களுக்குச் செவி கொடுப்பது தேவனுக்கு முன்பாக நியாயமாயிருக்குமா என்றார்கள்.” – அப் 5:29
7. ஸ்தேவான், பரிசுத்த ஆவிக்கு விரோதமாக நின்ற ஆலோசனை சங்கத்தாரைக் கண்டித்து உணர்த்தினார் – அப் 7. 51, 52