1. யோசேப்பின் சகோதரர்கள்: ஆதி 42:21 “நம்முடைய சகோதரனுக்கு நாம் செய்த துரோகம் நம்மேல் சுமந்தது; அவன் நம்மைக் கெஞ்சி வேண்டிக்கொண்டபோது, அவனுடைய மனவியாகுலத்தைக் கண்டும், அவனுக்குச் செவிகொடாமற் போனோமே; ஆகையால், இந்த ஆபத்து நமக்கு நேரிட்டது என்று ஒருவரையொருவர் பார்த்துச் சொல்லிக் கொண்டார்கள்.”
2. வனாந்தரத்தில் இஸ்ரவேலர்: எண் 21:7 “ஜனங்கள் மோசேயினிடத்தில் போய்: நாங்கள் கர்த்தருக்கும் உமக்கும் விரோதமாய்ப் பேசினதினால் பாவஞ்செய்தோம்; சர்ப்பங்கள் எங்களைவிட்டு நீங்கும்படி கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றார்கள்;”
3. எஸ்ராவின் கால யூதர்கள்: எஸ்றா 9:7 “எங்கள் பிதாக்களின் நாட்கள் முதல் இந்நாள்மட்டும் நாங்கள் பெரிய குற்றத்துக்கு உள்ளாயிருக்கிறோம்; எங்கள் அக்கிரமங்களினிமித்தம் நாங்களும் எங்கள் ராஜாக்களும், எங்கள் ஆசாரியர்களும், இந்நாளில் இருக்கிறதுபோல, அந்நியதேச ராஜாக்களின் கையிலே, பட்டயத்துக்கும், சிறையிருப்புக்கும், கொள்ளைக்கும், வெட்கத்துக்கும் ஒப்புக்கொடுக்கப்பட்டோம்.”
4. தாவீது: சங் 40 :12 “எண்ணிக்கைக்கு அடங்காத தீமைகள் என்னை சூழ்ந்து கொண்டது, என் அக்கிரமங்கள் என்னைத் தொடர்ந்து பிடித்தது, நான் நிமிர்ந்து பார்க்கக்கூடாதிருக்கிறது, அவைகள் என் தலைமயிரிலும் அதிகமாயிருக்கிறது, என் இருதயம் சோர்ந்து போகிறது.”
5. வேதபாரகர் பரிச்சேயர்: விபச்சாரஸ்திரீயைக் கல்லெறிந்து கொல்வதற்கு இயேசுவிடம் கொண்டு வந்த போது இயேசு அவர்களிடம் “உங்களில் பாவமில்லாதவன் இவன் மீது கல்லெறியக்கடவன்” என்றார். அப்பொழுது வேதபாரகரும், பரிச்சேயரும் தங்கள் மனசாட்சியினால் கடிந்து கொள்ளப்பட்டு பெரியோர் முதல் சிறியோர் வரைக்கும் ஒவ்வொருவராய்ப் போய் விட்டார்கள்.” – யோ 8:7 – 9