யோசேப்பு தன் 17 வது வயதில் தன் சகோதரர்களுடன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான். யாக்கோபு பலவருண அங்கியை யோசேப்புக்குத் தைத்துக் கொடுத்து அவனை அதிகமாக நேசித்தான். அப்பொழுது ஒரு சொப்பனம் கண்டான். அதில் சூரியனும், சந்திரனும், 11 நட்சத்திரங்களும் அவனை வணங்கினதாகவும், வயலில் அவனது குடும்பத்தார் அரிக்கட்டுகளைக் கட்டும் போது அவனுடைய அரிக்கட்டு நிமிர்ந்ததாகவும், மற்ற அரிக்கட்டுகள் அதைச் சுற்றி வணங்கி நின்றதைப் பார்த்ததாகவும் கூறினான். அதைக் கேட்ட அவனது சகோதரர்கள் அவன் மேல் பொறாமையால் கடுங் கோபங் கொண்டனர் – ஆதி 37:7-11