யோசுவா கர்த்தருடைய கட்டளையின்படி தொனிக்கும் ஏழு எக்காளங்களையும், ஏழு ஆசாரியர்கள் கர்த்தருடைய பெட்டிக்கு முன்பாகப் பிடித்துக் கொண்டு, ஆர்ப்பரியாமலும், சத்தங் காட்டாமலும் போகக் கூறினார். ஆறு நாட்கள் பட்டணத்தை ஒவ்வொரு தடவை சுற்றச் செய்தார். ஏழாம் நாளில் பட்டணத்தை ஏழு தரம் சுற்றச் செய்தார். ஏழாந்தரம் சுற்றி முடித்து எக்காளம் ஊதுகையில் ஜனங்கள் ஆர்ப்பரித்தார்கள். அலங்கம் இடிந்து விழுந்தது. உடனே ஜனங்கள் பட்டணத்திலுள்ள சகலத்தையும் பட்டயக் கருக்கினால் சங்காரம் பண்ணி அக்கினியால் சுட்டெரித்தனர். ராகாபின் குடும்பம் மட்டும் வெளியேற்றப்பட்டது. வெள்ளியையும், பொன்னையும், வெண்கலத்தினாலும், இரும்பினாலும் செய்த பத்திரங்களையும் மாத்திரம் கர்த்தருடைய ஆலய பொக்கிஷத்தில் சேர்த்தார்கள் – யோசு 6:1 – 24