Menu Close

யாக்கோபு

1. பயற்றங் கூழைக் கொடுத்து தன் தமையனை ஏமாற்றியவர் – ஆதி 25:29-34

2. தாயின் தூண்டுதலால் வஞ்சகம் பண்ணி தந்தையை ஏமாற்றி தமையனின் ஆசீர்வாதத்தை தந்தையிடம் பெற்றவர் – ஆதி 27:5-29

3. தமையனுக்குப் பயந்து தாய் தகப்பனை விட்டுப் பிரிந்தார் – ஆதி 27:42-44, 28:1-5

4. பெத்தேலில் தேவ தரிசனத்தைப் பெற்று பொருத்தனை செய்து நிறைவேற்றியவர் – ஆதி 28:10-22

5. ராகேலுக்காக அதிகமாக ஏழு வருடம் லாபானிடம் வேலை பார்த்தார் – ஆதி 29:18

6. லாபானை ஏமாற்றினார் – ஆதி 30:34-42

7. லாபானால் ஏமாற்றப்பட்டபோது பொறுமையுடன் செயல்பட்டார் – ஆதி 29 :22-28

8. தேவனோடு போராடி மேற்கொண்டார். “இஸ்ரவேல்” என்னும் பெயரைப் பெற்றார் – ஆதி 32:24-28

9. ஜெபிக்கிற குணம் கொண்டவர் – ஆதி 32:9-12

10. விசுவாச வீரர் – எபி 11:21

11. பாடுகளால் பக்குவப்பட்டவர்.

12. விசுவாசத்தினாலும், தீர்க்கதரிசன வரத்தினாலும் தனது பிள்ளைகளை ஆசீர்வதித்தார் – ஆதி 49:1-27

Related Posts