1. ரூபன்: “நீ என் சத்துவமும் முதற்பலனுமானவன். தண்ணீரைப் போல தளும்பினவனே, நீ மேன்மையடைய மாட்டாய்.” (இவன் தன் தகப்பனுடைய மஞ்சத்தை தீட்டுப் படுத்தினான்)
2. சிமியோனும், லேவியும்: “அவர்களுடைய பட்டயங்கள் கொடுமையின் கருவிகள். அவர்கள் மற்றும் லேவி தங்கள் கோபத்தினாலே ஒரு புருஷனைக் கொன்று தங்கள் அகங்காரத்தினாலே அரண்களை நிர்மூலமாக்கினார்களே.” (சீகேமுக்கு எதிராக யுத்தம் செய்தார்கள்)
3. யூதா: “சகோதரரால் புகழப்படுபவன் நீயே; உன் கரம் சத்துருக்களுடைய பிடரியின் மேல் இருக்கும்; உன் தகப்பனுடைய புத்திரர் உன்முன் பணிவார்கள். செங்கோல் உன்னை விட்டு நீங்குவதில்லை. நியாயப்பிரமாணிக்கன் உன் பாதங்களை விட்டு ஒழிவதும் இல்லை; ஜனங்கள் உன்னிடத்தில் சேருவார்கள்.”
4. செபுலோன்: “கடற்துரை அருகே குடியிருப்பான். அவன் கப்பல் துறைமுகமாயிருப்பான்; அவன் எல்லை சீதோன் வரைக்கும் இருக்கும்.”
5. இசக்கார்: “இரண்டு பொதியின் நடுவே படுத்துக்கொண்டிருக்கிற பலத்த கழுதை.”
6. தாண்: குதிரையின் மேல் ஏறியிருக்கிறவன் மல்லாந்து விழும்படியாய் அதின் குதிகாலைக் கடிக்கிறதற்கு வழியில் கிடக்கிற சர்ப்பத்தைப் போலவும், பாதையில் இருக்கிற விரியனைப் போலவும் இருப்பான்.”
7. காத்: ராணுவக் கூட்டம் பாய்ந்து விழும்; அவனோ முடிவில் அதின்மேல் பாய்ந்து விழுவான்.”
8. ஆசேர் ”ஆகாரம் கொழுமையாயிருக்கும்; ராஜாக்களுக்கு வேண்டிய ருசிவர்க்கங்களை அவன் தருவான்.”
9. நப்தலி: “விடுதலைபெற்ற பெண்மான்; இன்பமான வசனங்களை வசனிப்பான்.”
10. யோசேப்பு: “கனிதரும் செடி; அவன் நீரூற்றண்டையில் உள்ள கனி தரும் செடி; அதின் கொடிகள் சுவரின் மேல் படரும். அவன் மேய்ப்பனும், இஸ்ரவேலின் கன்மலையும் ஆனான். கர்த்தர் உயர வானத்திலிருந்து உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், கீழே ஆழத்தில் உண்டாகும் ஆசீர்வாதங்களினாலும், ஸ்தனங்களுக்கும் கர்ப்பங்களுக்குமுரிய ஆசீர்வாதங்களினாலும் உன்னை ஆசீர்வதிப்பார்.”
11. பென்யமீன்: “பீறுகிற ஓநாய்; காலையில் தன் இரையைப் பட்சிப்பான்; மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான்” – ஆதி 49:1 – 27