பாவம் விலக்கப்படும்போது உலகின் சிக்கல்கள் தாமாகவே விலகிக் கொள்ளும். முள்ளும் குறுக்கும் சாபத்தின் விளைவுகள் – ஆதி 3:18 பாவசாபத்தை முற்றும் உறிஞ்சிக் குடித்து நீக்க வந்த கிறிஸ்து முட்களைக் கிரீடமாகச் சூடி, அதன் கூறிய முனைகளால் நொந்து அலறி நித்திய மீட்பை ஆயத்தம் செய்தார் – மத் 27:29, 30 பூமி மீட்கப்படும்போது முட்கள் மாற்றப்படும். அங்கு தேவதாருக்கள் தோன்றும். காஞ்சொறிகள் இடம் பெயரும். அங்கு மெல்லிய மிருதுச்செடி எழும்பும் – ஏசா 55:13 மனிதர்களின் பேச்சுகள் பல நேரங்களில் முட்களாகவே அமைகின்றன. ஆனால் கிறிஸ்துவுடன் சரியான உறவுடன் வாழும் ஒருவரின் நிலை வேறுபட்டது. அவர்களுடைய சொற்களும், செயல்களும் சுவையானவையும், பயனுடையவையு மாகும் – கொலோ 4:6 விலைமதிப்புடைய தேவதாரு மரத்தைப் போல அவர்கள் வாழ்வு சமூகத்துக்கு மதிப்புடையதாக இருக்கும். மிருதுச்செடிபோல அது மென்மையானது. மனமும், மகிமையும் மிக்கதாக அது விளங்கும். கிறிஸ்துக்குரியோரும் மேன்மையானவர்களும், நறுமணத்தை வாரியிரைப்போருமாவார் – 2கொரி 2:14 – 16