பார்வோன் இரண்டு வருஷம் அரசாண்டபின் ஒரு சொப்பனம் கண்டான். அது என்னவென்றால், அவன் ஒரு நதியண்டையில் நின்று கொண்டிருக்கும் போது அழகான புஷ்டியான ஏழு பசுக்கள் புல் மேய்ந்து கொண்டிருந்த போது அவலட்சணமான ஏழு பசுக்கள் வந்து அதை பட்சித்துப் போட்டதைக் கண்டவுடன் விழித்ததாகக் கூறினான். பின் இரண்டாவது தடவை செழுமையான ஏழு கதிர்கள் ஒரே தாளிலிருந்து ஓங்கி வளர்ந்தது. பின்பு சாவியானதும் கீழ் காற்றினால் தீய்ந்ததுமான ஏழு கதிர்களும் முளைத்தது. சாவியான கதிர்கள் அந்த கதிர்களை விழுங்கிப் போட்டது. இதை யோசேப்பு விடுவித்தான். அவன் கூறியது “நல்ல ஏழு பசுக்களும், நல்ல கதிர்களும் ஏழு வருஷம் என்றும், அவைகளுக்குப் பின் வந்த கேவலமான பசுக்களும், காற்றினால் தீய்ந்து சாவியான ஏழு கதிர்களும் ஏழு வருஷமாகும். இவைகள் பஞ்சமான ஏழு வருஷங்கள். எகிப்தில் பரிபூரண விளைவு உண்டாகும் ஏழு வருஷம் வரும். அதன்பின் பஞ்சமுண்டாகும் ஏழு வருஷம் வரும். அப்பொழுது எகிப்து பஞ்சத்தால் பாழாகும். அந்த பஞ்சத்தால் பரிபூரணமெல்லாம் ஒழிந்து போகும். இந்த காரியம் தேவனால் நிச்சயிக்கப்பட்டிருக்கிறது” என்றும் கூறினான். இதை அறிவிக்கிறதுக்குத் தான் இந்த சொப்பனம் என்றான் – ஆதி 41:1-7, 28 –32